தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஹெச் 1 பி விசாக்களுக்கான கட்டணத்தை ரூ.88 லட்சமாக உயர்த்தி அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவு

 

Advertisement

அமெரிக்கா: ஹெச் 1 பி விசாக்களுக்கான கட்டணத்தை ரூ.88 லட்சமாக உயர்த்தி அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவில் தங்கி பணிபுரிந்து வரும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஹெச்.1 பி விசா தரப்படுகிறது. ஹெச் -1பி விசா மூலம் ஏராளமான இந்தியர்கள் அமெரிக்காவில் பணிபுரிந்து வருகின்றனர்.

அமெரிக்காவின் ஹெச் 1 பி விசா பெற இனி ஆண்டுதோறும் $1,00,000 (ரூ.88 லட்சம்) செலுத்த வேண்டும். செப். 21 முதல் அமலுக்கு வரும் இந்த புதிய உத்தரவு, அடுத்த 12 மாதங்களுக்கு செயலில் இருக்கும். உத்தரவை நீட்டிப்பது குறித்து பிறகு முடிவு செய்யப்படும். வேலைவாய்ப்புகளில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் நோக்கில் இது செயல்படுத்தப்படுகிறது.

ஹெச்-1 பி விசாக்களை பயன்படுத்தும் நாடுகளில் 71 சதவீதத்துடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஹெச்-1 பி விசா கட்டண உயர்வால் இந்திய ஐ.டி. நிறுவனங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் வேலை பார்க்க வேண்டும் என இந்தியர்களின் கனவும் தகரும் நிலை ஏற்பட்டுள்ளது.

 

Advertisement