தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அமெரிக்க அரசின் 40 நாள் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதில் முதல் வெற்றி: செனட் அவையில் திடீர் திருப்பம்

வாஷிங்டன்: அமெரிக்க அரசு ஒவ்வொரு ஆண்டும் செலவழிக்க தேவையான நிதிக்கு பட்ஜெட் தயாரித்து அதற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புதல் பெற வேண்டும். இந்த முறை, சுகாதார திட்டத்திற்கான மானியத்தை தொடர முடியாது என அதிபர் டிரம்பின் ஆளும் குடியரசு கட்சி திட்டவட்டமாக தெரிவித்தது. இதன் காரணமாக செலவின மசோதாவை நிறைவேற்ற எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி ஒப்புதல் தரவில்லை. இந்த கருத்து வேறுபாடு காரணமாக, செலவின மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாமல், அமெரிக்க அரசு நிர்வாகம் கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் 40 நாட்களாக முடங்கியிருக்கிறது. செலவின மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே அரசு பணியாளர்களுக்கு சம்பளம் தர முடியும், அரசின் திட்டங்களுக்கு நிதி வழங்க முடியும்.

Advertisement

இது எதுவும் கடந்த 40 நாட்களாக நடக்காமல் அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியிருக்கிறது. அமெரிக்க வரலாற்றில் இதுவே அரசின் நீண்ட கால நிதி முடக்கமாக இருக்கிறது.இந்நிலையில், அரசு முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதில் முதல் படியாக செனட் அவையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சுகாதார பாதுகாப்பு மானியங்கள் உத்தரவாத நீட்டிப்பு இல்லாமல், அரசுக்கு நிதியளிப்பதற்கான சமரச சட்டத்தை நிறைவேற்றுவதற்கும், ஜனவரி 1ம் தேதி காலாவதியாகும் மலிவு பராமரிப்பு சட்ட வரிச் சலுகைகளை நீட்டிப்பது குறித்து பின்னர் வாக்கெடுப்பு நடத்துவதற்கும் செனட் அவையில் நேற்று முன்தினம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் சில மிதவாத ஜனநாயக கட்சியினர் ஆதரவாக வாக்களித்தனர். இதனால் 60-40 என்ற வாக்கில் தீர்மானம் நிறைவேறியது.இதன் மூலம் அரசுக்கான நிதி ஜனவரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது அரசின் முடக்கத்தை தற்காலிகமாக தீர்த்து வைக்கும். அதே சமயம் டிசம்பர் இறுதியில் நடக்கும் இறுதி வாக்கெடுப்பில் ஜனநாயக கட்சியினர் ஒப்புக் கொள்ளாதபட்சத்தில் மீண்டும் அரசு நிர்வாகம் முடங்கும்.

Advertisement