தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னை - அபுதாபி விமானத்தில் ரூ.18 லட்சம் அமெரிக்க டாலர் பறிமுதல்: கடத்தல் குருவி சுற்றிவளைப்பு

மீனம்பாக்கம்: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அபுதாபி செல்லும் ஏர் அரேபியா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று காலை புறப்பட தயாராகிக் கொண்டிருந்தது. விமானத்தில் செல்ல வந்த பயணிகளை, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்து, விமானத்திற்கு அனுப்பி கொண்டிருந்தனர்.
Advertisement

அப்போது சென்னையை சேர்ந்த முகமது பைசல் (30) என்பவர், இந்த விமானத்தில் சுற்றுலா பயணியாக அபுதாபி செல்ல வந்திருந்தார். அவருடைய சூட்கேசை பாதுகாப்பு அதிகாரிகள் ஸ்கேன் மூலம் பரிசோதிக்க போது, சூட்கேஸ் ரகசிய அறைக்குள் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர் மறைத்து வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள், முகமது பைசல் சூட்கேஸை திறந்து சோதனையிட்டனர்.

அதில் ரூ.18 லட்சம் மதிப்புடைய அமெரிக்க டாலர் இருந்ததை கண்டுபிடித்தனர். இதனையடுத்து முகமது பைசல் பயணத்தை ரத்து செய்து, அவரிடம் இருந்து ரூ.18 லட்சத்தை பறிமுதல் செய்து, சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

சுங்க அதிகாரிகள், முகமது பைசலை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், முகமது பைசல் இந்தப் பணத்தை கூலிக்காக எடுத்து சொல்லும் கடத்தல் குருவி என்று தெரிய வந்தது. மேலும் கணக்கில் இல்லாத இந்த பணத்தை இவரிடம் கொடுத்து அனுப்பிய ஆசாமி யார் என்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement