தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விதிகளில் அதிரடி மாற்றம் செய்து உத்தரவு; அமெரிக்காவில் ஓராண்டில் 85,000 விசாக்கள் ரத்து: மாணவர் விசாவும் பறிபோனதால் அதிர்ச்சி

வாஷிங்டன்: அமெரிக்காவில் குடியேற்ற விதிகள் கடுமையாக்கப்பட்ட நிலையில், கடந்த ஜனவரி முதல் இதுவரை 85 ஆயிரம் விசாக்கள் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் அமைந்தது முதல், நாட்டின் எல்லைப் பாதுகாப்பு மற்றும் குடியேற்றக் கொள்கைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. பயங்கரவாத அச்சுறுத்தல்களைத் தடுக்கும் நோக்கிலும், உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் விசா நடைமுறைகளில் கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

Advertisement

விசா காலாவதியாவது, பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பது மற்றும் தீவிரமான விதிமீறல்களில் ஈடுபடுவது போன்ற காரணங்களுக்காகக் கடந்த காலங்களில் விசாக்கள் ரத்து செய்யப்பட்டு வந்தன. விசா பெற்றவர்களின் பின்னணி மற்றும் நடவடிக்கைகளை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வரும் நிலையில், தற்போது கண்காணிப்பு வளையம் மேலும் இறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஜனவரி 2025 முதல் தற்போது வரை சுமார் 85 ஆயிரம் விசாக்களை அமெரிக்க வெளியுறவுத்துறை அதிரடியாக ரத்து செய்துள்ளது. இதில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர் விசாக்களும் அடங்கும் என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், திருட்டு மற்றும் தாக்குதல் போன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதே பாதிக்கும் மேற்பட்ட விசா ரத்துக்கு முக்கியக் காரணமாகும்’ என்று தெரிவித்தார். மேலும், அமெரிக்காவில் தங்கியுள்ள 5.5 கோடி வெளிநாட்டினரைத் தொடர்ந்து கண்காணிக்கும் வகையிலான புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், வரும் 15ம் தேதி முதல் எச்-1பி விசா விண்ணப்பதாரர்கள் தங்கள் சமூக வலைதளக் கணக்குகளை அதிகாரிகளின் ஆய்வுக்கு உட்படுத்தும் வகையில் பொதுவெளியில் வைத்திருக்க வேண்டும் எனவும் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News