தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அமெரிக்க துணை தூதரகம் ஏவிஎம் ஸ்டுடியோவுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் இரவு மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில், அண்ணா மேம்பாலம் அருகே உள்ள அமெரிக்க துணை தூதரகத்தில் சற்று நேரத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிந்தது. தகவல் அறிந்து தேனாம்பேட்டை போலீசார் தலைமையில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் நேற்று முன்தினம் இரவு முழுவதும் அமெரிக்க துணை தூதரகத்தில் சோதனை நடத்தியும் எந்த வெடிகுண்டும் சிக்கவில்லை. அதேபோல், வடபழனி ஏவிஎம் ஸ்டுடியோவுக்கு நேற்று முன்தினம் இரவு மின்னஞ்சல் வந்தது.

Advertisement

அதில், ஸ்டுடியோவில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், முடிந்தால் கண்டுபிடித்து கொள்ளுங்கள் என்றும் கூறப்பட்டிருந்தது. தகவல் அறிந்து வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் ஸ்டுடியோ முழுவதும் தேடியும் அங்கும் வெடிகுண்டு சிக்கவில்லை. இதையடுத்து, மின்னஞ்சல் அனுப்பிய மர்ம நபரை வடபழனி போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். கடந்த 2 வாரமாக வெளிநாடுகளில் இருந்து மின்னஞ்சல் மூலம் சென்னையில் முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வரும் சம்பவம் அதிகரித்துள்ளது. இதனால் சென்னை காவல்துறை ஒன்றிய அரசு உதவியுடன் விசாரித்து வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து இதுபோன்ற மிரட்டல் விடுப்பவர்களை கண்டறிந்து, அவர்களது பாஸ்போர்ட்டை முடக்கி, கைது செய்து சென்னைக்கு அழைத்து வர போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Advertisement

Related News