தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அமெரிக்க வரி விதிப்பு பாதிப்பை தடுக்காதது ஏன்..? ஒன்றிய அரசுக்கு வைகோ கண்டனம்

திருச்சி: அமெரிக்க வரி விதிப்பால் தமிழ்நாடு பாதிப்பு அடைந்துள்ளது என வைகோ தெரிவித்துள்ளார்.

Advertisement

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருச்சி விமான நிலையத்தில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அமெரிக்காவின் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு பல தொழில்களில் பாதிப்பு அடைந்துள்ளது. குறிப்பாக திருப்பூர் பின்னலாடைகள், பால் உற்பத்தி தொழிலாளர்கள் இதனால் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

இதற்கு மாற்று ஏற்பாடுகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆனால் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, திமுகவை வேரோடு அகற்றி எறிய வேண்டும் என கூறியுள்ளார். இது கண்டனத்திற்குரியது.

அரசியல் களத்தில் கட்சிகளை வெற்றி பெற வேண்டும் என அக்கட்சி தொண்டர்களை அறிவுறுத்துவது ஜனநாயகம். ஆனால் பல முன்னோடிகள் ஒன்றிணைந்து ரத்தம் சிந்தி வளர்த்த திமுகவை இவ்வாறு விமர்சனம் செய்வது கண்டனத்திற்குரியது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அயல்நாடு பயணத்தின் வாயிலாக முதலீடுகளையும், வேலைவாய்ப்புகளையும் ஈர்த்துள்ளார். இது குறித்து அவர் நாடு திரும்பியவுடன் விரைவாக எடுத்துரைப்பார். அதற்குள் வெள்ளை அறிக்கை கேட்பது நியாயமற்றது. ஜிஎஸ்டி கூட்டத்திற்கு 18 கோரிக்கைகளை தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் முன் வைத்துள்ளனர். ஆனால் அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement