தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அமெரிக்காவில் லாரிகள் மீது மோதி வெடித்து சிதறிய விமானம்: விமானி உட்பட இருவர் உடல் கருகி பலி

டெக்சாஸ்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், சாலையோரம் நின்றிருந்த லாரிகள் மீது சிறிய ரக விமானம் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஃபோர்ட் வொர்த் நகருக்கு அருகே ஹிக்ஸ் விமானத்தளம் அமைந்துள்ளது. இந்த விமானத்தளத்திற்கு அருகே நேற்று பீச்கிராஃப்ட் கிங் ஏர் 90 என்ற சிறிய ரக விமானம் பறந்து கொண்டிருந்தது.

Advertisement

அப்போது, விமானியின் கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம், சாலையோரம் நின்றிருந்த கனரக லாரிகள் மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் விமானம் வெடித்துச் சிதறி தீப்பற்றி எரிந்தது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஃபோர்ட் வொர்த், ஹாஸ்லெட் மற்றும் சாகினா ஆகிய தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

விபத்தைப் நேரில் பார்த்தவர்கள், விமானம் மோதியதும் ‘பிரம்மாண்டமான நெருப்புக் கோளமாக’ காட்சியளித்ததாக தெரிவித்தனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் எழுந்த கரும்புகை மண்டலம் பல கிலோமீட்டர் தூரத்திற்கு தெரிந்தது. விபத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள முக்கிய சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டன. இந்த கோர விபத்துக்கான காரணம் குறித்து விமானப் போக்குவரத்து நிர்வாகம் மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் ஆகியவை தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளன.

Advertisement