தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அமெரிக்க தூதரகம் முற்றுகை முயற்சி; போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பரிதாப பலி: பாகிஸ்தானில் பெரும் கலவரம்

இஸ்லாமாபாத்: பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பாகிஸ்தானில் நடைபெறும் பேரணியில் வன்முறை வெடித்ததில் 11 பேர் உயிரிழந்த நிலையில், தலைநகர் இஸ்லாமாபாத்தில் பதற்றம் நீடிக்கிறது. இஸ்ரேலின் காசா நடவடிக்கைகள் மற்றும் அமெரிக்காவின் தலையீட்டைக் கண்டித்து, பாகிஸ்தானின் தெஹ்ரீக்-இ-லப்பைக் (டி.எல்.பி) என்ற இஸ்லாமிய அமைப்பு கடந்த இரண்டு நாட்களாக பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் மாபெரும் போராட்டத்தை நடத்தியது.

Advertisement

இஸ்லாமாபாத்தில் செயல்படும் அமெரிக்க தூதரகத்தை நோக்கிய இந்த பேரணியில் வன்முறை வெடித்ததில், பஞ்சாப், இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டி ஆகிய பகுதிகளில் 11 பேர் போலீஸ் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தனர்; 100க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இதனால், நாடு தழுவிய அளவில் இணைய சேவைகள் முடக்கப்பட்டன. இந்நிலையில், அரசு அதிகாரிகளுடன் நடத்திய ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையை அடுத்து, இஸ்லாமாபாத் நோக்கிய பேரணியை தற்காலிகமாக நிறுத்துவதாக டி.எல்.பி தலைவர் சாத் ரிஸ்வி அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, இணைய சேவைகள் பகுதியளவு மீண்டும் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும், லாகூர் மற்றும் முரிட்கே ஆகிய பகுதிகளில் இஸ்ரேலுடனான உறவுகளைத் துண்டிக்க வேண்டும், பாலஸ்தீனத்திற்கு உதவிகளை அதிகரிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டக்காரர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். பதற்றம் நீடிப்பதால், நகர்ப்புறங்களில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனிடையே, ராவல்பிண்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கல்வி நிறுவனங்கள் இன்று காலை பலத்த பாதுகாப்புடன் மீண்டும் திறக்கப்பட்டன. இருப்பினும், முக்கிய சந்திப்பான ஃபைசாபாத் உட்பட சில பகுதிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன.

Advertisement

Related News