தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நகர்ப்புற மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் லிப்ட் இயங்காததை கண்டித்து அலுவலகத்தை மக்கள் முற்றுகை

துரைப்பாக்கம்: பெரும்பாக்கம் நகர்ப்புற மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் லிப்ட் இயங்காததை கண்டித்து, பாதிக்கப்பட்ட மக்கள் பொறியாளர் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். சென்னை அடுத்த பெரும்பாக்கம் நகர்ப்புற மேம்பாட்டு வாரிய 8 மாடி குடியிருப்பு கொண்ட 185 பிளாக்குகளில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில் சில பிளாக்குகளில் பல மாதமாக லிப்ட்கள் செயல்படவில்லை. மேலும், அடிக்கடி மின் தடையும் ஏற்படுகிறது. ஜெனரேட்டர்கள் பழுதால், மின்தடையின் போது முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் படி ஏற முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
Advertisement

இதனால், நேற்று இரவு செம்மஞ்சேரியில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாக பொறியாளர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர். அலுவலகத்திற்குள் பணி செய்து கொண்டிருந்த பொறியாளர்கள், ஊழியர்கள் வீட்டுக்கு செல்ல முடியாமல் சிறை பிடிக்கப்பட்டனர்.தகவறிந்த செம்மஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் நாளை, பழுதடைந்த மின் தூக்கிகள் செயல்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததையடுத்து அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Advertisement