தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வரப்போகும் சந்திர கிரகணம்: திருப்பதி ஏழுமலையான் கோயில் மூடப்படும் நேரம் அறிவிப்பு

திருமலை: சந்திர கிரகணத்தை ஒட்டி திருப்பதி ஏழுமலையான் கோயில் 12 மணி நேரம் மூடப்படும் என தேவஸ்தானம் அறிவுப்பு வெளியிட்டது. தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு சந்திர கிரகணம் செப்டம்பர் 7ஆம் தேதி இரவு 9.50மணி முதல் செப்டம்பர் 8ஆம் தேதி அதிகாலை 1.31மணி வரை கிரகணம் நீடிக்கும். எனவே சந்திர கிரகணத்துக்கு 6மணி நேரத்துக்கு முன்பு செப்டம்பர் 7ஆம் தேதி பிற்பகல் 3.30மணிக்கு கோயில் மூடப்படும். சுத்தம் செய்து கிரகண தோஷம், நிவாரண பூஜைக்கு பிறகு செப்டம்பர் 8ஆம் தேதி அதிகாலை 3மணிக்கு கோயில் கதவுகள் மீண்டும் திறக்கப்படும்.

Advertisement

பக்தர்களுக்கான தரிசனம் செப்டம்பர் 8ஆம் தேதி காலை 6மணிக்கு பிறகு மீண்டும் தொடங்கும். சந்திர கிரகணம் தொடர்ந்து செப்டம்பர் 7ஆம் தேதி ஊஞ்சல் சேவை, அர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன. திருமலையின் உள்ள வெவ்வேறு இடங்களில் அன்னபிரசாதம் விநியோகம், தரிகொண்டா அன்னபிரசாதம் வளாகம், வைகுண்டம் காத்திருப்பு வளாகம் மற்றும் அனைத்து இடங்களிலும் செப்டம்பர் 7ஆம் தேதி பிற்பகல் 3மணி முதல் அன்னபிரசாதம் வழங்குவது நிறுத்தப்படும்.

இருப்பினும் அன்னபிரசாதம் பிரிவு சார்பில் ராம பார்க்கிசிய யாத்திரம், சமூக கூடம், CRO அலுவலகம், ANC பகுதிகளில் பக்தர்களுக்கு 30,000 அன்னபிரசாதம் பாக்கெட்டுகளும் விநியோகிக்கபடும். பக்தர்களுக்கு அன்னபிரசாதம் மீண்டும் வழக்கம்போல் செப்டம்பர் 8ஆம் தேதி காலை 8.30மணி முதல் மீண்டும் தொடங்கும். எனவே பக்தர்கள் சிரமங்களை தவிர்க்க திருமலைக்கு தங்கள் யாத்திரியை அதற்கேற்ப திட்டமிடுமாறு திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திர கிரகணம் செப்டம்பர் 7ஆம் தேதி இரவு 9.50மணி முதல் செப்டம்பர் 8ஆம் தேதி அதிகாலை 3.31மணி வரை நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News