தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உபியில் பரபரப்பு சம்பவம் இன்ஸ்பெக்டரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற பெண் காவலர்: ரூ.25 லட்சம் தராததால் ஆத்திரம்

ஜாலவுன்: உத்தரப் பிரதேச மாநிலம் ஜாலவுன் மாவட்டம் குதவுண்ட் காவல் நிலையத்தில் ஆய்வாளராக அருண்குமார் ராய் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 5ம் தேதி இரவு தனது குடியிருப்பில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அப்போது அங்கிருந்த பெண் காவலர் மீனாட்சி சர்மா, ‘ஆய்வாளர் தனது சர்வீஸ் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்’ என்று கூறியிருந்தார். இந்நிலையில், ஆய்வாளரின் மனைவி அளித்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. சம்பவ இடத்திலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, துப்பாக்கிச் சத்தம் கேட்ட சிறிது நேரத்தில் மீனாட்சி சர்மா அங்கிருந்து அவசரமாக வெளியேறுவது பதிவாகியிருந்தது.

Advertisement

அதையடுத்து பெண் காவலர் மீனாட்சி சர்மாவிடம் போலீசார் கிடுக்கிப்படி விசாரணை நடத்தினர். அப்போது, ‘எனது திருமணச் செலவுக்காக 25 லட்சம் ரூபாய் தர வேண்டும், இல்லையென்றால் இருவரும் நெருக்கமாக இருந்த வீடியோக்களை உனது மனைவியிடம் காட்டிவிடுவேன்’ என்று மீனாட்சி மிரட்டியுள்ளார். இதனால் கொலை நடந்தது உறுதி செய்யப்பட்டது. ஆய்வாளரின் சடலம் கொசுவலைக்குள் கிடந்ததும், அறையில் தோட்டா கிடைக்காததும் சந்தேகத்தை வலுப்படுத்தியது. இதையடுத்து தற்கொலை நாடகமாடிய மீனாட்சி சர்மாவை போலீசார் கைது செய்து, கொலை வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement