தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரூ.100 கோடி சொத்து குவித்த உ.பி. டிஎஸ்பி சஸ்பென்ட்

கான்பூர்: உத்தரபிரதேச காவல்துறையின் துணை கண்காணிப்பாளராக ரிஷிகாந்த் சுக்லா பொறுப்பு வகித்து வந்தார். இவர் கடந்த 1998ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை கான்பூரில் பணியாற்றியபோது போலி வழக்குகள், மிரட்டி பணம் பறித்தல் மற்றும் நில அபகரிப்பு போன்ற மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், குண்டராக இருந்து வழக்கறிஞராக மாறிய அகிலேஷ் துபேயுடன் சேர்ந்து இதுபோன்ற மோசடிகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ரிஷிகாந்த் சுக்லா, மன்பூரி மாவட்டத்தில் வட்ட அதிகாரியாக இருந்தபோதும், மிரட்டி பணம் பறித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். மேலும், சுக்லா பதவி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தன் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கூட்டாளிகள் பெயர்களில் வருமானத்துக்கு மீறிய சொத்துகளை வாங்கி குவித்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வந்தனர். அதில், ரிஷிகாந்த் சுக்லாவுக்கு சொந்தமாக ரூ.92 கோடி மற்றும் பான் கார்டுடன் இணைக்கப்பட்ட கூடுதல் சொத்துகள், மற்றும் முறையான ஆவணங்களின்றி ரூ.100 கோடிக்கும் அதிகமாக சொத்துகள் இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில் ரிஷிகாந்த் சுக்லாவை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், ரிஷிகாந்த் சுக்லா மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீஸ் டிஜிபிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

Advertisement

Related News