தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உபியில் 3 முறை முதல்வர் மோடி பாஜவை ஆரம்பித்தது அமித் ஷா: திண்டுக்கல் சீனிவாசன் உளறல்; பக்கத்தில் நின்ற நயினார் பதறல்

திண்டுக்கல்: உத்தரப்பிரதேசத்தில் 3 முறை முதலமைச்சராக மோடி இருந்தார், பாஜவை ஆரம்பித்தது அமித் ஷா என நயினார் நாகேந்திரனை அருகில் வைத்துக் கொண்டு திண்டுக்கல் சீனிவாசன் பேசியதைக் கேட்டு பாஜவினர் அதிர்ந்து போயினர். திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டுவில் பாஜ சார்பில் தமிழகம் தலை நிமிர, தமிழனின் பயணம் பிரசாரம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். பிரசாரத்தின்போது திண்டுக்கல் சீனிவான் தனது வழக்கமான பாணியில் உளறி கொட்டினார்.

Advertisement

அவர் பேசுகையில், ‘‘3 முறை முதலமைச்சராக உத்தரப்பிரதேசத்தில் மோடி இருந்தார்’’ என்றார். மோடி முதலமைச்சராக 3 முறை இருந்தது குஜராத்தில் தான். தொடர்ந்து திண்டுக்கல் சீனிவாசன், ‘‘இன்று எந்த நாட்டிற்கு சென்றாலும் என்பதற்கு பதில் எந்த உலகத்திற்கு சென்றாலும்...’’ என குறிப்பிட்டு பேசினார். அதன்பின், திண்டுக்கல் சீனிவாசன், அமித்ஷா பெயரை மறந்து விட்டு அருகில் நின்ற நயினார் நாகேந்திரனிடம் கேட்டு விட்டு, பேசும்போது, ‘‘அமித்ஷா ஜி இந்த கட்சியை ஆரம்பிக்கும் போது...’’ என ஆரம்பித்தார். அதாவது பாஜவை ஆரம்பித்தவர் அமித்ஷா என பேசினார்.

தொடர்ந்து அவர், ‘‘அமித் ஷா கட்சியை ஆரம்பிக்கும்போது தம்பி நயினார் நாகேந்திரன்...’ என்றவர் சற்றுத் தடுமாறி, அவரிடமே கேட்டு ‘‘எல்.முருகன், அண்ணாமலை போன்றவர்களை வைத்து கொண்டு...’’ என ஏதோ சொல்ல வந்தவர் திடீரென பேச்சை நிறுத்தி கொண்டு, ‘‘நேரிடையாக சொன்னால் பாஜவும், அதிமுகவும் கூட்டணி அமைத்து இருக்கிறோம். எங்களது கூட்டணியின் தலைவர் எடப்பாடி பழனிசாமி. இதை சொன்னவர் அமித்ஷா’’ என்றார்.

திண்டுக்கல் சீனிவாசனின் தொடர்ச்சியான தவறான பேச்சுகளால் அருகில் இருந்த நயினார் நாகேந்திரன் அதிர்ந்து போய், பக்கத்தில் இருந்து அவரது காதை அடிக்கடி கடித்து கொண்டே இருந்தார். பாஜ கட்சி தொடங்கி 7 ஆண்டுகளுக்கு பின்பே அமித்ஷா பாஜவில் இணைந்தார். ஆனால், பாஜவை தொடங்கியது அமித்ஷா என்று திண்டுக்கல் சீனிவாசன் பேசியது கண்டு பாஜவினர் அதிர்ந்து போயினர்.

* அதிமுக கொடி கட்டிய காரில் நயினார் பிரசாரம்

பிரசாரத்தின்போது பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், திண்டுக்கல்லில் இருந்து சாலை மார்க்கமாக வத்தலக்குண்டுவிற்கு வந்தார். அப்போது அவர் அதிமுக கொடி கட்டிய ஓபன் டாப் காரில் எழுந்து நின்றபடி பிரசாரம் செய்ய வந்தார். இதை கண்ட பாஜவினரிடையே சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் காளியம்மன் கோயில் அருகே அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏறி நயினார் நாகேந்திரன் பேசி விட்டுச் சென்றார்.

Advertisement

Related News