தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாதுகாப்பற்ற முறையில் ரத்தம் ஏற்றியதால் நேர்ந்த கொடூரம்; 5 ‘தாலசீமியா’ குழந்தைகளுக்கு ‘எச்.ஐ.வி’ தொற்று: ஜார்கண்ட் அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி

ராஞ்சி: ஜார்கண்டில் தாலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட ஐந்து குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற ரத்தம் ஏற்றியதன் மூலம் எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டதாக எழுந்துள்ள புகார், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம், மேற்கு சிங்பூம் மாவட்டம், சைபாசா நகரில் உள்ள சதார் அரசு மருத்துவமனையில் தாலசீமியா நோய்க்காக சிகிச்சை பெற்று வந்த 7 வயது குழந்தை ஒருவருக்கு, ரத்தம் ஏற்றிய பிறகு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டதாக கடந்த 24ம் தேதி அக்குழந்தையின் பெற்றோர் புகார் அளித்தனர்.

Advertisement

இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ராஞ்சியில் இருந்து அனுப்பப்பட்ட ஐந்து பேர் கொண்ட மருத்துவக் குழுவினர், அந்த மருத்துவமனையின் ரத்த வங்கியில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில், அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் நான்கு தாலசீமியா குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட ஐந்து பேருமே சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவக் குழுவின் முதற்கட்ட விசாரணையில், மருத்துவமனையின் ரத்த வங்கியில் ரத்த மாதிரிப் பரிசோதனை, பதிவேடுகளைப் பராமரித்தல் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளில் கடுமையான குளறுபடிகள் இருந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட சுகாதார அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சுஷாந்தோ மஜி கூறுகையில், ‘பாதுகாப்பற்ற ரத்தம் ஏற்றியது மட்டுமே இதற்குக் காரணம் என்று தற்போதைக்கு முடிவுக்கு வர முடியாது. பாதுகாப்பற்ற ஊசிகள் போன்ற பிற வழிகளிலும் எச்.ஐ.வி. பரவ வாய்ப்புள்ளது’ என்று குறிப்பிட்டார்.

இந்த மருத்துவப் அலட்சியம் தொடர்பான விவகாரத்தை ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளதுடன், மாநில சுகாதாரத் துறைச் செயலாளர் மற்றும் மாவட்ட சுகாதார அதிகாரியிடம் அறிக்கை கேட்டுள்ளது. மேலும், இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்த மாநில சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Related News