தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பல்கலைகள் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகள் ஒரே மாதிரியான கால அட்டவணையை பின்பற்ற வேண்டும்: அமைச்சர் பொன்முடி அறிவுறுத்தல்

சென்னை: சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு உயர் கல்வி மன்ற வளாகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் தமிழ்நாட்டில் உள்ள மாநிலப் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு உயர் கல்வித்துறையின் கீழ் இருக்கும் 13 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, நிதிப் பற்றாக்குறையை களைவது குறித்தும், தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள குறைகளை சரி செய்வது குறித்தும் தீவிரமாக விவாதித்தார்.
Advertisement

தமிழ்நாடு மாநிலப் பல்கலைக் கழகங்களின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் உயர்கல்வித் துறையால் தயாரித்து வழங்கப்பட்ட பாடத்திட்டத்தில் குறிப்பிட்ட பகுதியை கடைப்பிடிக்க வேண்டும் எனவும், அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான கால அட்டவணைகளை கொண்டு கல்லூரிகளை நடத்துவதற்கும், மாணவர்களுக்கான மதிப்பெண்களை அளிக்கும் முறையையும் அவற்றை பல்கலைக்கழகங்கள் பின்பற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளார். பல்கலைக்கழகங்களில் உள்ள காலி பணியிடங்கள் மற்றும் நிதிச் சுமை காரணமாக கல்வியின் தரம் பாதிக்காத வகையில் செயல்பட வேண்டும் எனவும் நிதிச்சுமை குறித்து முதல்வரிடம் கலந்த ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

இக் கூட்டத்தில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர், சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகன்னாதன், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் கதிரேசன், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி, கொடைக்கானல் அன்னை தெரேசா பல்கலைக்கழக துணைவேந்தர் கலா, வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆறுமுகம், சென்னை திறந்த நிலை பல்கலைக்கழக துணை வேந்தர் ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News