தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தனித்துவமான சுவை, மருத்துவ குணம் கொண்டது 500 ஆண்டு பழமையான சிவன் சம்பா அரிசி ரகம்

*வயலில் நாற்று பறிப்பு பணி மும்முரம்

Advertisement

திருத்துறைப்பூண்டி : தனித்துவமான சுவை, மருத்துவ குணம் கொண்டது, 500 ஆண்டு பழமையான சிவன் சம்பா அரிசி ரகம். இந்த ரக திருத்துறைப்பூண்டி வயலில் நாற்று பறித்து நடுவதற்கான பணிகள் நடைபெறுகிறது.திருத்துறைப்பூண்டி சாமியப்பா நகர் பகுதியை சேர்ந்த இயற்கை விவசாயி பொன்முடி என்பவர் கடந்த 15 ஆண்டுகளாக மேலமருதூர் பகுதியில் 6 ஏக்கர் நிலப்பரப்பில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார்.

இந்தாண்டு அதில் நடுவதற்காக சம்பா பாரம்பரிய நெல் ரகங்களான தூயமல்லி, ரத்தசாலி, சிவன் சம்பா ஆகிய நெல் ரகங்களை துளசாபுரம் அருகே மகாராஜபுரம் கிராமத்தில் நாற்று விட்டிருந்தார். அதனை பெண் தொழிலாளர்கள் மூலம் நாற்று பறித்து நடுவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

நெல் ரகங்கள் குறித்து விவசாயி பொன்முடி கூறுகையில்,சிவன் சம்பா என்பது தமிழ்நாட்டின் ஒரு பாரம்பரிய நெல் வகையாகும். இது அதன் மருத்துவ குணங்கள், தனித்துவமான சுவை மற்றும் ஊட்டச்சத்து மதிப்புக்காக அறியப்படுகிறது. குறிப்பாக இரும்பு, துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் இதில் நிறைந்துள்ளன. இது பாரம்பரிய வெள்ளை அரிசி வகைகளில் ஒன்றாகும் மற்றும் சன்ன ரக அரிசியாக கருதப்படுகிறது.

இது தமிழ்நாட்டின் பழமையான நெல் வகைகளில் ஒன்றாகும், இது சுமார் 500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நெல் இயற்கையான முறைகளிலும், ரசாயன உரங்கள் இன்றியும் பயிரிடுகிறோம்.

இது சம்பா பருவத்தில் பயிரிடப்படுகிறது, இதன் சாகுபடி காலம் 130-135 நாட்கள் ஆகும்.ரத்த சர்க்கரை மற்றும் கொழுப்பைக் கட்டுப்படுத்துதல், சிறந்த செரிமானம், நீரிழிவு மேலாண்மை, இரத்த சோகையைத் தடுத்தல் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துதல். இது குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் மற்றும் அதிக நார்ச்சத்து கொண்டது, இது உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

தூய மல்லி என்பது ஒரு பாரம்பரிய நெல் வகையாகும், இது வெள்ளை நிற அரிசியையும், நல்ல மணம் கொண்டதையும் கொண்டுள்ளது. இது 130 முதல் 140 நாட்களில் விளையக்கூடியது மற்றும் பூச்சி, நோய்களை எதிர்க்கும் தன்மை கொண்டது.

இந்த ரகம் தஞ்சாவூர் மற்றும் சேலம் போன்ற பகுதிகளில் பிரபலமாக உள்ளது. பால் வெள்ளை நிறத்திலும், மெல்லியதாகவும், மனம் மிக்கதாகவும் இருக்கும். இது ஒரு பாரம்பரிய நெல் வகையாகும். இது நடுத்தர குட்டைப்பயிராக வளரும்.

ஏக்கருக்கு சுமார் 15 மூட்டைகள் வரை மகசூல் தரக்கூடியது. 130 முதல் 140 நாட்கள் வரை பயிர் செய்ய ஆகும். நெல்லின் அரிசி மட்டுமல்லாது தவிடும், சத்து மிகுந்து காணப்படுகிறது.

அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட இது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.மேலும், திருத்துறைப்பூண்டி சாமியப்பா நகர் பகுதியை சேர்ந்த இயற்கை விவசாயி கூறுகையில், சம்பா பாரம்பரிய நெல் ரகங்களான தூயமல்லி, ரத்தசாலி, சிவன் சம்பா ஆகிய நெல் ரகங்களை துளசாபுரம் அருகே மகாராஜபுரம் கிராமத்தில் நாற்று விட்டிருந்தார். அதனை பெண் தொழிலாளர்கள் மூலம் நாற்று பறித்து நடுவதற்கான பணிகள் நடைபெறுகிறது என்று குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News