தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஒன்றிய அமைச்சர் குமாரசாமி மீதான நிலமோசடி புகார் எஸ்ஐடி விசாரிக்க அனுமதி: கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: ஒன்றிய கனரக தொழில்துறை அமைச்சர் எச்.டி.குமாரசாமிக்கு எதிரான நில மோசடி புகாரை விசாரணை நடத்த மாநில அரசு அமைத்த சிறப்பு புலனாய்வு படை, விசாரணை தொடர உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

Advertisement

கர்நாடக முன்னாள் முதல்வரும் ஒன்றிய கனரக தொழில்துறை அமைச்சருமான எச்.டி.குமாரசாமிக்கு சொந்தமான பண்ணை தோட்டம், ராம்நகரம் மாவட்டம், பிடதி ஒன்றியம், கேதகானஹள்ளி கிராமத்தில் உள்ளது. பண்ணை தோட்டத்தை ஓட்டியுள்ள 14 ஏக்கர் அரசு நிலம், ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக லோக்ஆயுக்தாவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

புகாரை விசாரணை நடத்திய லோக்ஆயுக்தா போலீசார், குமாரசாமிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதை விசாரணை நடத்திய நீதிமன்றம், நடவடிக்கை எடுக்க மாநில அரசுக்கு உத்தரவிட்டது. அதையேற்று பெங்களூரு மண்டல ஆணையர் அம்லான் ஆதித்ய பிஸ்வாஸ் தலைமையில் சிறப்பு விசாரணைப்படை (எஸ்ஐடி) அமைத்து கடந்த ஜனவரி 28ம் தேதி மாநில அரசு உத்தரவிட்டது. எஸ்ஐடி விசாரணைக்கு கர்நாடக உயர் நீதிமன்ற தனி நீதிபதி தடை விதித்தார். இதை எதிர்த்து மாநில அரசின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

அம்மனு நேற்று தலைமை நீதிபதி விபுபக்ரு மற்றும் நீதிபதி சி.எம்.ஜோஷி ஆகியோர் அமர்வு முன் விசாரணை நடந்தது. அதை தொடர்ந்து, நில முறைகேடு புகாரில் குமாரசாமி மீதான புகாரை விசாரணை நடத்த மாநில அரசு அமைத்த எஸ்ஐடி விசாரணை நடத்த ஒருநபர் நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். அரசு அமைத்த அமலன் ஆதித்யா பிஸ்வாஸ் தலைமையிலான புலனாய்வு படை விசாரணை நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டனர்.

Advertisement