தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எதிர்ப்புகள், ஆர்ப்பாட்டம் நடப்பதால் புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து ஒன்றிய அரசு பரிசீலிக்கவேண்டும்: திருமாவளவன்!

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி அளித்த பேட்டி; புதிய குற்றவியல் சட்டத்தை ஒன்றிய அரசு அமல்படுத்தியுள்ளது. இதன்மீது அகில இந்திய அளவில் வழக்கறிஞர்கள், சட்ட வல்லுநர்கள் கடும் விமர்சனத்தை வைத்துள்ளனர். இதுதொடர்பாக சென்னையில் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. எனவே, புதிய குற்றவியல் சட்டம் குறித்து ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். உரிய திருத்தங்களை கொண்டுவரவேண்டும். ஒன்றிய பாஜ அரசின் எதேச்சதிகார போக்கு வழக்கமான ஒன்றுதான்.
Advertisement

தற்போது 200க்கும் மேற்பட்ட இடங்களில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்ற நிலையில், காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சிகளும் வலுவான எதிர்க்கட்சியாக இயங்குவோம். ஆளுங்கட்சிக்கு நெருக்கடி தரும் அளவுக்கு எங்களின் செயல்பாடுகள் அமையும். இலங்கையின் மூத்த தலைவர் இரா.சம்பந்தன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். சிங்களப் படையினரால் 27 ராமேஸ்வர மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை உடனடியாக விடுவிக்க ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

 

Advertisement

Related News