தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஒன்றிய அரசின் வரி பகிர்வு தமிழ்நாட்டுக்கு ரூ.4,144 கோடி: உ.பிக்கு ரூ.18,227 கோடி பீகாருக்கு ரூ.10,219 கோடி

புதுடெல்லி: ஒன்றிய அரசின் வரி பகிர்வு அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு ரூ.4,144 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உபிக்கு ரூ.18,227 கோடியும், பீகாருக்கு ரூ.10,219 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளுக்கு முன்கூட்டியே தவணை வரி பகிர்வை ஒன்றிய நிதி அமைச்சகம் அறிவித்து வெளியிட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் மொத்தமுள்ள 28 மாநிலங்களுக்கு ரூ.1,01,603 கோடி மதிப்பிலான கூடுதல் வரி மீதான நிதியை நேற்று வெளியிட்டுள்ளது. பொதுவாக, மாதாந்திர வரி மீதான நிதி ஒவ்வொரு மாதத்திலும் 10ம் தேதி வழங்கப்படும். ஆனால் இந்த முறை பண்டிகைக்கால செலவினை கருத்தில் கொண்டு, அக்டோபர் 10ம் தேதிக்கு முன்பாகவே, ஒரு முன்னுரிமை தவணையாக இந்த தொகை மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

இதில் குறிப்பாக தமிழ்நாட்டிற்கு ரூ.4,144 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உத்தரபிரதேசத்திற்கு ரூ.18,227 கோடியும், பீகாருக்கு ரூ.10,219 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு பட்டியலில் மொத்தம் உள்ள 28 மாநிலங்களில் 8வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. மேலும் ஒன்றிய அரசு பண்டிகை காலத்தில் மாநிலங்களின் நிதிச்சுமையை குறைத்து, நலத்திட்டங்களை விரைவில் நிறைவேற்றும் வகையில் இந்த கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒன்றிய அரசின் இந்த முடிவு, மாநில அரசுகளின் நலத்திட்ட அமலாக்கம் மற்றும் அத்தியாவசிய செலவீடு ஆகியவற்றை ஊக்குவிக்க உதவும் என்று ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8வது இடத்தில் தமிழ்நாடு

1. உத்தரபிரதேசம் ரூ.18,227 கோடி

2. பீகார் ரூ.10,219 கோடி

3. மத்தியபிரதேசம் ரூ.7,976 கோடி

4. மேற்குவங்கம் ரூ.7,644 கோடி

5. மகாராஷ்டிரா ரூ. 6,418 கோடி

6. ராஜஸ்தான் ரூ. 6,123 கோடி

7. ஒடிசா ரூ.4,601 கோடி

8. தமிழ்நாடு ரூ.4,144 கோடி

9. ஆந்திரா ரூ.4,112 கோடி

10. கர்நாடகா ரூ. 3705 கோடி

11. குஜராத் ரூ. 3,534 கோடி

12. சட்டீஸ்கர் ரூ.3,462 கோடி

13. ஜார்க்கண்ட் ரூ.3360 கோடி

14. அசாம் ரூ.3,178 கோடி

15. தெலங்கானா ரூ.2,136 கோடி

16. கேரளா ரூ.1,956 கோடி

17. பஞ்சாப் ரூ.1836 கோடி

18. அருணாச்சல் ரூ.1785 கோடி

19. உத்தரகாண்ட் ரூ.1,136 கோடி

20. அரியானா ரூ.1,111 கோடி

21. இமாச்சல் ரூ.843 கோடி

22. மேகாலயா ரூ. 779 கோடி

23. மணிப்பூர் ரூ.727 கோடி

24. திரிபுரா ரூ.719 கோடி

25.நாகாலாந்து ரூ.578 கோடி

26. மிசோரம் ரூ.508 கோடி

27. சிக்கிம் ரூ.394 கோடி

28. கோவா ரூ.392 கோடி

Advertisement

Related News