தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஒன்றிய அரசுக்கு அடிமை சாசனம் எழுதி தந்துவிட்டனர் அனைத்து கட்சி கூட்டத்தை அதிமுகவினர் குறை சொல்வதில் ஆச்சரியம் இல்லை: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி

சென்னை: கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சிஎம்டிஏ சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். தொடர்ந்து, அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது: யுபிஎஸ்சி தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்கின்ற ஒரு பயிற்சி பள்ளியை இம்மாதம் 20ம்தேதி முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார். ஒரே நேரத்தில் 84 பேர் அமர்ந்து பள்ளி படிப்பிற்கும், உயர் படிப்பிற்கும் தயாராவதற்கு உண்டான குளிர்சாதன வசதியுடன் கூடிய அறை கட்டப்பட்டு வருகிறது. அதேபோல், ஒரே நேரத்தில் 60 பேர் யுபிஎஸ்சி மற்றும் பிற தேர்வுகளுக்கு அவர்களுக்குண்டான வகுப்பு அறைகளும் தயார் நிலையில் உள்ளன.

Advertisement

இந்த படைப்பகம் பயன்பாட்டிற்கு வரும்போது அதிக அளவு கட்டணம் செலுத்தி தனியார் பயிற்சி அகாடமியில் படிப்பதற்கு சூழல் இல்லாதவர்களுக்கு இது ஒரு பெரிய வரப்பிரசாதமாக இருக்கும். ஜெகநாதன் சாலையில் இலவசமாக டயாலிசிஸ் சென்டர் தொடங்கப்பட உள்ளது. இதில் பிசியோதெரபி யூனிட்டும் ஏற்படுத்தப்பட உள்ளது. இவை அனைத்தும் மிக மிக குறைந்த கட்டணத்தில் செயல்பாட்டில் கொண்டு வர முதல்வர் ஏற்பாடு செய்திருக்கிறார். இந்த டயாலிசிஸ் சென்டர் அடுத்த மாதம் முதல் வாரத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும். ஒட்டுமொத்தமாக கொளத்தூர் தொகுதியை பொறுத்தவரையில் வறுமை கோட்டிற்கு கீழே வாழும் மக்கள் மற்றும் நடுத்தர மக்கள் அவர்களது கல்வி மற்றும் மருத்துவ தேவை குறைந்த செலவில் அடைவதற்கு இதுபோன்ற திட்டங்களை முதல்வர் கொண்டு வந்துள்ளார். அந்த திட்டத்தின் முன்மாதிரிதான் பெரியார் நகர் அரசு மருத்துவமனை.

ஒட்டுமொத்தமாக தன்னிறைவு அடைந்த ஒரு தொகுதியாக கொளத்தூர் தொகுதியை மாற்றி வருகிறார் முதல்வர். எஸ்ஐஆருக்கு எதிரான அனைத்து கட்சி கூட்டம் மக்களை திசை திருப்பும் செயல் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சிக்கிறார். பாஜவோடு, ஒன்றிய அரசோடு அதிமுகவினர் அடிமை சாசனம் எழுதி தந்துவிட்டவர்கள். எனவே, இதுபோன்று மக்கள் நலன் கருதிய இந்த முன்னெடுப்புகளை அவர்கள் குறை செல்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார். இதில், மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், மண்டல குழு தலைவர் சரிதா, பகுதி செயலாளர்கள் ஐசிஎப் முரளி, நாகராஜன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சந்துரு, மகேஷ் குமார் மற்றும் அரசு அதிகாரிகள் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News