ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3% உயர்த்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்
டெல்லி: ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3% உயர்த்த டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 3% அகவிலைப்படி உயர்வை ஜூலை 1ம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அகவிலைப்படி 55%ல் இருந்து 58% ஆக உயர்த்தி வழங்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
Advertisement
Advertisement