ஆபாச இணையதளங்களை முடக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: சென்னை ஐகோர்ட் உத்தரவு
சென்னை: ஆபாச இணையதளங்களை முடக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவு அளித்துள்ளது. இணையதளத்தில் பகிரப்பட்ட தன்னுடைய ஆபாச வீடியோக்களை அகற்ற கோரி பெண் வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் உத்தரவு அளித்துள்ளது. ராவணின் தலை வெட்டப்படும்போது மீண்டும் முளைப்பது போல் வீடியோக்கள் வெளியாகின்றன. ஆபரேஷன் சிந்தூரின்போது சட்டவிரோத இணையத்தை முடக்கியதுபோல நடவடிக்கை தேவை என்று நீதிபதி கருத்து கருத்து தெரிவித்துள்ளார்.