தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஒன்றிய அரசு அமல்படுத்தியுள்ள தொழிலாளர் சட்டங்களை எதிர்த்து ஸ்டிரைக்: 10 தொழிற்​சங்​கங்​கள் அழைப்பு வங்கி, அஞ்சல் சேவை பாதிக்கப்படும் அபாயம்

புதுடெல்லி: ஒன்றிய அரசு அமல்படுத்தியுள்ள புதிய தொழிலாளர் சட்டங்களை எதிர்த்து வரும் 26ம் தேதி வேலை நிறுத்த போராட்டத்துக்கு 10 தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளது. இதனால் வங்கி, அஞ்சல் சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் 2020ம் ஆண்டு நிறைவேறிய 4 தொழிலாளர் சட்டங்கள் நேற்று முன்தினம் முதல் நடைமுறைக்கு வருவதாக ஒன்றிய அரசு அறிவித்தது. அதன்படி, 4 தொழிலாளர் சட்டங்கள் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளன.

Advertisement

இதில், ஏற்கனவே இருந்த 29 தொழிலாளர் சட்டங்களை ஊதிய குறியீடு, தொழில்துறை குறியீடு, சமூக பாதுகாப்பு குறியீடு, தொழில்துறை பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் பணி சூழல் குறியீடு என 4 சட்டங்களாக ஒருங்கிணைத்து, புதிய விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் புதிய தொழிலாளர் சட்டங்கள் அமலுக்கு வந்தது. இவை முற்போக்கான சீர்திருத்தங்கள் என பிரதமர் மோடி தெரிவித்தார். ஆனால் இந்த 4 புதிய தொழிலா​ளர் சட்ட தொகுப்​பு​களுக்கு எதிர்ப்பு தெரிவிக்​கும் வகை​யில் வரும் 26ம் தேதி நாடு தழு​விய பொது வேலைநிறுத்த போராட்​டம் நடை​பெறும் என ஒன்றிய தொழிற்​சங்​கங்​கள் கூட்​டாக அறி​வித்​துள்​ளன.

இது தொடர்​பாக ஐஎன்​டி​யுசி, ஏஐசிடி​யுசி, எச்​எம்​எஸ், சிஐடி​யு, தொமுச உள்பட 10 ஒன்றிய தொழிற்​சங்​கங்​கள் சார்​பில் வெளி​யிடப்​பட்​டுள்ள கூட்​டறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: ஏற்​கனவே நடை​முறை​யில் இருந்த 29 தொழிலா​ளர் நலச்சட்​டங்​களை நீக்​கி​விட்டு அவற்​றுக்கு பதிலாக புதி​தாக 4 தொழிலா​ளர் சட்ட தொகுப்​பு​களை ஒன்றிய அரசு உரு​வாக்கி அவற்றை அமல்​படுத்​தி​யுள்​ளது. தொழிலா​ளர் விரோத, முதலா​ளி​களுக்கு ஆதரவான இந்த சட்​டங்​களை தன்​னிச்​சை​யாக நடை​முறைப்​படுத்​தி இருப்​ப​தற்கு ஒன்றிய தொழிற்​சங்​கங்​களின் கூட்டு நடவடிக்​கை ​குழு சார்​பில் கடும் கண்டனத்தை தெரி​வித்​துக் ​கொள்​கிறோம். 4 தொழிலா​ளர் சட்ட தொகுப்​பு​களும் நவ. 21 முதல் அமல்​படுத்​தப்​படும் என ஜனநாயக விரோத, தன்​னிச்​சை​யான அறிவிக்​கை வெளியிட்டது, அனைத்து ஜனநாயக நெறி​முறை​களை​யும் மீறும் செயல்.

இது தொழிலா​ளர் நலன்​களை முற்​றி​லும் சிதைத்​துள்​ளது. இந்த சட்​டங்களை தொடக்க நிலை​யிலேயே தொழிற்​சங்​கங்​களும், தொழிலா​ளர் நல கூட்​டமைப்​பு​களும் கடுமை​யாக எதிர்ப்பு தெரி​வித்​தன. அதையும் மீறி பீகார் சட்டமன்ற தேர்​தல் வெற்​றியை தொடர்ந்து 4 தொழிலா​ளர் சட்​ட ​தொகுப்​பு​களை​யும் ஒன்றிய அரசு திடீரென அமல்​படுத்​தி​யுள்​ளது. இவை உழைக்கும் வர்க்​கத்​தினரின் நலன்​களுக்கு முற்​றி​லும் எதி​ரானவை. இந்​த சட்​ட ​தொகுப்​பு​களை தொழிலாளர்களின் வாழ்​வா​தா​ரங்​களுக்கு எதி​ரான இனரீ​தியி​லான தாக்​குதலாக கருதுகிறோம்.

இவை தொழிலா​ளர்​களை அடிமை​யாக்​கு​வதுடன் அவர்​களின் உரிமை​களை முற்​றி​லும் பறிக்​கும். இந்த சட்ட தொகுப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்​கும் வகை​யில் தொழிற்​சங்​கங்​கள் மற்​றும் தொழில் கூட்​டமைப்​பு​கள் சார்​பில் வரும் 26ம் தேதி நாடு தழு​விய பொது வேலைநிறுத்த போராட்​டத்​துக்கு அழைப்பு விடுக்​கப்​படு​கிறது. இந்த சட்​ட ​தொகுப்​பு​களுக்கு எதிர்ப்பு தெரிவிக்​கும் வகை​யில் தொழிலா​ளர்​கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணி​யாற்ற வேண்​டும். அதோடு வரும் திங்​கட்​கிழமை முதல் வாயிற்​கூட்​டம், தெரு​முனை கூட்​டம் என எதிர்ப்பு நடவடிக்கை பணி​களில் ஈடுபட வேண்​டும். இந்த 4 சட்​ட ​தொகுப்​பு​கள் வாபஸ் பெறப்​படும் ​வரை உழைக்​கும் மக்​கள் வலிமை​யுடன் போ​ராடு​வார்​கள் என்ற எச்​சரிக்​கையை ஒன்றிய அரசுக்கு விடுக்​கிறோம்​.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசு அமல்படுத்திய தொழிலாளர் சட்டங்களுக்கு எதிராக, வரும், 26ம் தேதி நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தவும், வர்த்தக கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இதனால் ரயில் மற்றும் பொது போக்குவரத்து, வங்கிகள், அஞ்சல் சேவைகள், காப்பீடு, சுங்க தொழில்களில் உள்ள தொழிலாளர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்பதால் இந்த துறையின் செயல்பாடுகள் பாதிக்கப்படும். இதனால் உற்பத்தித் துறை மற்றும் பிற தொழில்களுக்குப் பெரும் நிதி இழப்பு ஏற்படும். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

Advertisement

Related News