தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் கீழடியில் ஒன்றுமில்லை என்றவரிடம் ஆய்வறிக்கை கேட்கிறது ஒன்றிய அரசு

Advertisement

மதுரை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே, கீழடியில் கடந்த 2013 முதல் 2016 வரை ஒன்றிய அரசின் தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணி நடந்தது. தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்த இந்த அகழாய்வின்போது 5,765க்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த அரிய வகைப் பொருட்கள் கிடைத்தன. இதைத்தொடர்ந்து அமர்நாத் ராமகிருஷ்ணன் தனது 982 பக்க அகழாய்வு அறிக்கையை ஒன்றிய அரசுக்கு அளித்தார்.

இதில், கலாச்சாரம், விவசாயம், விலங்குகள், நகர நாகரிகம் உள்ளிட்டவை குறித்து ஆவண, ஆதாரத்துடன் கூறியிருந்தார். கீழடியில் கிடைத்த பொருட்களை ரேடியோ கார்பன் முறையில் பகுப்பாய்வு செய்ததில், இவை கிட்டத்தட்ட 2,600 ஆண்டுகளுக்கு முந்தையது என்பது உறுதியானது. அவரது அறிக்கையை ஒன்றிய அரசு வெளியிடாமல் இழுத்தடித்த நிலையில், அனைத்து தரப்பினரும் கோரிக்கை வைத்ததையடுத்து, அறிக்கையில் திருத்தம் தேவை எனக் கூறி ஒன்றிய அரசு திருப்பி அனுப்பியது.

இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசின் செயல் தமிழ் நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கீழடியில் 3ம் கட்ட அகழாய்வு பணிக்கு நியமிக்கப்பட்ட ஸ்ரீராமன், ‘‘2 மாதங்களில் குறிப்பிடும்படியாக கீழடியில் ஒன்றும் கிடைக்காததால், மேற்கொண்டு அகழாய்வு நடத்தத் தேவையில்லை’’ என ஒன்றிய அரசுக்கு தெரிவித்திருந்தார். அவர் கடந்த 2019ல் ஓய்வு பெற்றிருந்தார்.

தான் ஆய்வு மேற்கொண்ட கீழடி மற்றும் ஈரோடு மாவட்டம் கொடுமணல் குறித்த அகழாய்வு அறிக்கையை அளிக்க அனுமதி கோரி இந்திய தொல்லியல் துறைக்கு கடிதம் அளித்திருந்தார். அதை ஏற்று கீழடி மற்றும் கொடுமணல் அகழாய்வு அறிக்கையை தாக்கல் செய்யுமாறு இந்திய தொல்லியல் துறை தற்போது உத்தரவிட்டுள்ளது. அகழாய்வு நடத்த தேவையில்லை என தொல்லியல் துறைக்கு அறிக்கை கொடுத்தவரிடமே, ஒன்றிய அரசு அறிக்கை கேட்பது கீழடி அகழாய்வில் ஒன்றும் இல்லையெனக் கூறி இழுத்து மூடி மறைப்பதற்கான அரசியலே என தொல்லியல் அறிஞர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

 

Advertisement

Related News