தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஒன்றிய அமைச்சரவை முடிவு 2030ல் காமன்வெல்த் போட்டி இந்தியாவில் நடத்த ஒப்புதல்: அகமதாபாத் தேர்வு

புதுடெல்லி: வரும் 2030ம் ஆண்டில் காமன்வெல்த் விளையாட்டு போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கான ஏலத்தில் பங்கேற்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. பிரமதர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், 2030ம் ஆண்டில் நடக்க உள்ள காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கான ஏலத்தில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. ஏலத்தை சமர்பிப்பதற்கான ஒன்றிய இளைஞர்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் முன்மொழிவு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement

முன்னதாக போட்டியை நடத்துவதற்கான ஆர்வத்தை தெரிவிக்க இந்திய ஒலிம்பிக் சங்கம் ஒப்புதல் அளித்த நிலையில், அமைச்சரவையும் ஏற்றுக் கொண்டுள்ளது. உலகத் தரம் வாய்ந்த அரங்கங்கள், அதிநவீன பயிற்சி கூடங்கள் இருப்பதால் காமன்வெல்த் போட்டிகளை நடத்த குஜராத்தின் அகமதாபாத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஏலத்தில் இந்தியா வெற்றி பெறும் பட்சத்தில் குஜராத் அரசுக்கு தேவையான மானிய உதவி வழங்கப்படும். இந்த ஏலத்திற்கான விருப்பத்தை சமர்பிக்க வரும் 31ம் தேதி கடைசி நாளாகும். எனவே அடுத்த 48 மணி நேரத்திற்குள் இந்த செயல்முறையை இந்திய ஒலிம்பிக் சங்கம் முடிக்கும் என அதிகாரிகள் கூறி உள்ளனர்.

இதில் 72 நாடுகளைச் சேர்ந்த தடகள வீரர்கள் பங்கேற்பார்கள் என்பதால் விளையாட்டு மட்டுமின்றி சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மேம்பாட்டிற்கு வழிவகுக்கும். இந்தியா கடைசியாக 2010ல் காமன்வெல்த் போட்டிகளை நடத்தியது. இதுதவிர, சாலையோர வியாபாரிகள் நலனுக்கான பிஎம் ஸ்வநிதி திட்டத்தை ரூ.7,332 கோடி செலவில் 2030 மார்ச் 31 வரை நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், ரூ.12,328 கோடியில் கர்நாடகா, தெலங்கானா, பீகார் மற்றும் அசாமில் 3 ரயில் பாதைகளில் மல்டி டிராக்கிங் வசதியை ஏற்படுத்தவும், குஜராத்தின் கட்ச் பகுதியில் புதிய ரயில் வழித்தடம் அமைக்கவும் அமைச்சரவையில் ஒப்புதல் தரப்பட்டுள்ளது.

Advertisement