தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்தியா - அமெரிக்கா வர்த்தகப் போர்; ஒன்றிய அமைச்சர் அமெரிக்கா பயணம்: பேச்சுவார்த்தை மீண்டும் தொடக்கம்

புதுடெல்லி: ரஷ்யாவிடமிருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ததற்கு பதிலடியாக, இந்தியப் பொருட்கள் மீது 50 சதவீதம் வரை அமெரிக்கா அபராத வரி விதித்தது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவில் விரிசல் ஏற்பட்டதுடன், இந்திய ஏற்றுமதியாளர்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். இதன் காரணமாக, கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருந்த இருதரப்பு வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தையும் ஒத்திவைக்கப்பட்டது. இந்தச் சூழ்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்க உள்ளது. சமீபத்தில் புதுடெல்லியில் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதிகள் குழு நடத்திய பேச்சுவார்த்தை சாதகமாக அமைந்ததைத் தொடர்ந்து, பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் தொலைபேசியில் உரையாடினர்.

Advertisement

இந்த முன்னேற்றங்களின் அடிப்படையில், ஒன்றிய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் அடுத்த வாரம் வாஷிங்டன் பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின்போது, வரி விதிப்பு மற்றும் சந்தை அனுமதி போன்ற முக்கியப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் குறித்துப் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தின் இடையே, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோவைச் சந்தித்துப் பேசவிருப்பது, இந்தப் பேச்சுவார்த்தைக்கு மேலும் வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Related News