தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஒன்றிய அரசுடன் கருத்து வேறுபாட்டால் ஜெகதீப் தன்கர் விலகலா?.. பரபரப்பு தகவல்கள்

Advertisement

டெல்லி: ஒன்றிய அரசுடனான கருத்து வேறுபாட்டால் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 21ம் தேதி வரை இக்கூட்டத்தொடர் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சூழலில் நேற்று மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் ஜெகதீப் தன்கர் மாநிலங்களவையை வழிநடத்தினார். இந்த சூழலில் நேற்று இரவு துணை ஜனாதிபதி உடல் நலக்குறைவால் பதவியில் இருந்து விலகுவதாக ஜெகதீப் தன்கர் திடீரென அறிவித்தார். இதுதொடர்பாக தனது ராஜினாமா கடிதத்தை அவர் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பி வைத்தார்.

ஒன்றிய அரசுடனான கருத்து வேறுபாட்டால் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி நீக்க தீர்மானத்தை இரு அவைகளிலும் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. நேற்று நடந்த மாநிலங்களவை அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் தீர்மானம் பற்றி விவாதிக்க ஜெகதீப் தன்கர் ஒப்புதல் அளித்ததாக கூறப்படுகிறது. ஜெகதீப் தன்கரின் முடிவால் ஒன்றிய அரசு அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. ஒன்றிய அரசின் அதிருப்தி காரணமாக ஜெகதீப் தன்கர் தானே முன்வந்து பதவி விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நீதித்துறையில் முறைகேட்டை தடுக்க தேசிய நீதிபதிகள் நியமனக் குழுவை அமைக்க குரல் கொடுத்தார் ஜெகதீப் தன்கர்.

ஒன்றிய அரசின் நிலைப்பாட்டிற்கு எதிராக ஜெகதீப் தன்கர் செயல்பட்டதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் அண்மையில் தன்கர் சந்தித்திருந்தார். எதிர்க்கட்சித் தலைவர்களுடன் தன்கர் நெருக்கம் காட்டியதையும் ஒன்றிய அரசு தரப்பு விரும்பவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Related News