உணவே மருந்து!
* சூடான சுக்குமல்லி காபியில் சிறிது தேன் கலந்து குடிக்க சளி கரையும்.
* நாட்டு வெங்காயம் இரண்டு அல்லது மூன்றை பச்சையாக சாப்பிட்டால் சளி கரையும்.
* பனை ஓலையில் பின்னப்பட்ட பாயில் படுத்து வந்தால் உடல் குளிர்ச்சி அடையும். கண் நோய்கள் வராது.
* முருங்கைக் கீரையை வெள்ளரி விதையுடன் அரைத்து வயிற்றின் மேல் கனமாகப்பூச சிறுசீர் கட்டு உடையும்.
* புளியங்கொழுந்தை பறித்து பச்சையாக சாப்பிட்டு வர கண்களைப் பற்றிய புண்கள், நோய்கள் ஆறும்.
* புளியங்கொட்டையை பொடி செய்து, தேங்காய் எண்ணெயில் குழைத்து புண்களின் மீது பூசிவர புண் ஆறும்.
* நல்லெண்ணெயை உடலில் தேய்த்துக் குளித்தால் அது மூலச்சூட்டை தணிக்கும். தோல் பகுதியை சுத்தமாக்கி வியர்வை வெளியேற உதவும்.
* அரிசியுடன் வெந்தயம் சேர்த்து, பூண்டை தட்டிப் போட்டு கஞ்சி வைத்துக் குடித்தால் எளிதில் செரிக்கும். இளம் தாய் மார்களுக்கு நன்றாக பால் சுரக்கும்.
* 2 கிராம் பெருங்காயத்தை 20 மி.லி. நல்லெண்ணெயில் காய்ச்சி வடித்து ஒரிரு துளிகள் காதில் விட காது வலி தீரும்.
* இருமல், மூச்சுத்திணறல் போன்ற சுவாசப் பிரச்னைகளுக்கு ஆட்டுப்பால் நல்ல மருந்தாகும்.
* பாலூட்டும் தாய்மார்கள் ஆட்டுப்பால் குடித்தால் அவர்களுக்கு போதுமென்ற அளவுக்கு பால் சுரக்கும்.
* கழுதைப்பால் உடல் சூட்டை தணிக்கும். உடல் துர்நாற்றம் போக்கும். வாத நோய்களின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தும்.
* அன்னாசிப்பழம் சாப்பிட்டால் இரத்தம் சுத்தமாகும். இரத்தம் ஊறும். பித்தம், கபம் போகும்.
- விமலா சடையப்பன்