தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

2025-26 நிதியாண்டில் 1.5 மெட்ரிக் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்ய ஒன்றிய அரசு அனுமதி

டெல்லி : அக்டோபர் மாதம் தொடங்கிய 2025-26 பருவத்திற்கு பிறகு 1.5 மில்லியன் டன் சர்க்கரை ஏற்றுமதியை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்றார் உணவு அமைச்சர் பிரகலாத் ஜோஷி. கடந்த 2023-ம் ஆண்டுக்கு முந்தைய 5 ஆண்டுகளில், இந்தியா உலகின் 2-வது பெரிய சர்க்கரை ஏற்றுமதியாளராக இருந்தது, ஆண்டுக்கு சராசரியாக 68 லட்சம் டன் ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆனால் வறட்சி காரணமாக 2023-2024-ம் ஆண்டில் அரசாங்கம் சர்க்கரை ஏற்றுமதியை தடை செய்தது.

Advertisement

கடந்த ஆண்டு 10 லட்சம் டன் மட்டுமே அனுமதித்தது. இந்த நிலையில் கரும்பு விவசாயிகளின் நலன் தொடர்பாக சில கோரிக்கைகளை வலியுறுத்தி கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்துக்கு பதில் அளித்த மத்திய அரசு, நாட்டில் கரும்பு விவசாயிகளின் நலனை பாதுகாக்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை பட்டியலிட்டு இருந்தது.

அந்த பட்டியலில் வெல்லப்பாகுக்கான வரி நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெல்லப்பாகுக்கு 50 சதவீத வரி விதிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் 2025-2026-ம் ஆண்டில் 15 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதித்திருப்பதாக மத்திய உணவு வினியோகத்துறை முதலமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News