தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குக்கி அமைப்புடன் ஒன்றிய அரசு நடத்திய பேச்சுவார்த்தைக்கு மெய்தி அமைப்பு எதிரிப்பு : மணிப்பூரில் மீண்டும் பதற்றம்

இம்பால்: மணிப்பூரில் குக்கி அமைப்புடன் ஒன்றிய அரசு நடத்திய பேச்சுவார்த்தைக்கு மெய்தி அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் மணிப்பூரில் மீண்டும் பதற்றம் ஏற்பத்துள்ளது. மணிப்பூரில் கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து மெய்தி மற்றும் குக்கி ஆகிய இரு சமூகத்தினரிடையே மோதல் உருவானது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த கலவரத்தால், 260க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் தங்களது வீடுகளை இழந்து வெளி மாநிலத்தில் உள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

மணிப்பூரில் வன்முறையை தூண்டியதாக முதலமைச்சராக இருந்த பா.ஜ.க.வை சேர்ந்த பிரேன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து. மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. கலவரத்தால் இரண்டரை ஆண்டுகளாக பற்றி எரியும் மணிப்பூருக்கு பிரதமர் மோடி செல்லவேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில், வரும் 13 ஆம் தேதி பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியாக குக்கி, ஸோ இன குழுக்களுடன் ஒன்றிய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி தேசிய நெடுஞ்சாலையை திறந்த விட சம்மதம் இரு பிரிவினரும் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகின. இந்த நிலையில், மணிப்பூரில் குக்கி அமைப்புடன் ஒன்றிய அரசு நடத்திய பேச்சுவார்த்தைக்கு மெய்தி அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசின் ஒரு தலைப்பட்சமான இந்த முடிவை ஏற்க முடியாது என்று மெய்தி போராட்டக்குழுவினர் கூறியுள்ளனர். மெய்தி குழுவினரின் சமரச முயற்சியை நிராகரித்துள்ளதால் மணிப்பூரில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

Related News