தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தீர்ப்புகளை அவைக்கு உள்ளேயோ, வெளியே விமர்சிக்கக்கூடாது : நாடாளுமன்றத்தில் எம்.பிக்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்த ஒன்றிய அரசு!!

டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 1ம் தேதி தொடங்க உள்ள நிலையில், எம்பிக்களுக்கு கட்டுப்பாடுகளை ஒன்றிய அரசு விதித்துள்ளது. மாநிலங்களவைத் தலைவர் வழங்கும் தீர்ப்புகளை அவைக்கு உள்ளேயோ, வெளியே விமர்சிக்கக்கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 1ம் தேதி தொடங்கி 19ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த கூட்டத் தொடரில் சிவில் அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி வழங்குவது, இந்திய உயா்கல்வி ஆணையம் அமைப்பது, வணிகத்தை எளிமைப்படுத்த பெருநிறுவன சட்டங்கள் முன்மொழிவது உள்ளிட்ட 10 மசோதாக்களை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

Advertisement

இதனிடையே எஸ்ஐஆர் உள்ளிட்ட விவகாரங்களை எதிர்க்கட்சிகள் எழுப்பத்திட்டமிட்டுள்ளனர். இதையொட்டி மாநிலங்களவையில் எம்பிக்களுக்கு விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், மாநிலங்களவைத் தலைவர் வழங்கும் தீர்ப்புகளை அவைக்கு உள்ளேயோ, வெளியே விமர்சிக்கக் கூடாது, ஒன்றிய அமைச்சர் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்து பேசினால், சம்பந்தப்பட்ட நபர் அவையில் இருக்க வேண்டும். அப்போது மட்டுமே பேச அனுமதிக்கப்படும். இல்லாவிட்டால் அது விதிமீறலாக கருதப்படும். மாநிலங்களவைக்குள் பேனர் உள்ளிட்டவற்றை உறுப்பினர்கள் காண்பிக்கக் கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

 

Advertisement

Related News