தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஒன்றிய அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் 5 ஆயிரம் நெல் முட்டைகள் மழையில் நனைந்து நாசம்: விவசாயிகள் வேதனை

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே ஒன்றிய நெல் கொள்முதல் நிலையத்தில் 5 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசமானதைக் கண்ட விவசாயிகள் வேதனை அடைந்தனர். மதுராந்தகம் அருகே உள்ள தண்டரை கிராமத்தில் ஒன்றிய அரசின் நேரடி கொள்முதல் நிலையம் உள்ளது. இங்கு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட சுமார் 5000 நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதன்மீது தார்பாய் எதுவும் போடப்படாமல் திறந்தவெளியில் இருந்தன.

Advertisement

இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக நெல்மூட்டைகள் அனைத்தும் மழையில் நனைந்தது. மேலும், நெல் மூட்டைகள் முளைத்து கிடப்பதைக் கண்ட விவசாயிகள் வேதனை அடைந்தனர். மேலும், அதிகாரிகளின் அலட்சியத்தால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணானதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

இந்நிலையத்தில் நெல் கொள்முதல் கடந்த மாதம் 30ம் தேதி வரை நடந்தது. கொள்முதல் நிலையம் மூடப்பட்டு ஐந்து நாட்கள் ஆகியும் நெல் மூட்டைகளை பாதுகாப்பு கிடங்கிற்கு எடுத்துச் செல்லாமல் தற்போது பெய்த மழையில் நனைந்து மூட்டைகளில் இருந்த நெல்மணிகள் முளைத்து வீணாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News