தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தீர்ப்பாயங்களின் செயல்பாட்டை சீர்குலைக்க ஒன்றிய அரசு மீண்டும் மீண்டும் முயற்சி: உச்சநீதிமன்றம் கண்டனம்

டெல்லி: தீர்ப்பாயங்களின் செயல்பாட்டை சீர்குலைக்க ஒன்றிய அரசு மீண்டும் மீண்டும் முயற்சி செய்து வருவதாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 2001 ஆம் ஆண்டு தீர்ப்பாயங்களுக்கான சீர்திருத்த சட்ட விதிகளை ஒன்றிய அரசு கொண்டு வந்தது. இதனை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு, தீர்ப்பாய சீர்திருத்த சட்ட விதிகளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. தீர்ப்பாயங்கள் சட்ட விதிமுறைகளின் அதிகார பிரிவு, நீதித்துறை சுதந்திர கொள்கைகளுக்கு எதிராக இருப்பதால் அதை அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தீர்ப்பாய உறுப்பினர்களின் ஓய்வு வயது 62 ஆக இருக்க வேண்டும். தலைவர்கள் ஓய்வு வயது 65 ஆக இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது.

Advertisement

இதனையடுத்து உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை ரத்து செய்யும் விதமாக ஒன்றிய அரசு, இந்த சட்டம் கொண்டு வந்துள்ளதாகவும் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தீர்ப்பாயங்களின் செயல்பாடு அதன் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் நியமனம் உள்ளிட்ட செயல்பாடுகளை சீர்குலைக்க ஒன்றிய அரசு மீண்டும், மீண்டும் முயற்சிக்கிறது என்று தீர்ப்பில் தலைமை நீதிபதி அமர்வு கண்டனம் தெரிவித்துள்ளது. தீர்பாயங்களை மேற்பார்வையிட 4 மாதங்களுக்குள் தேசிய தீர்ப்பாய ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த ஆணையம் தீர்ப்பாய பிரச்சனைகளை கவனிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Related News