தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எடப்பாடிக்கு புதிய நெருக்கடி: சசிகலா, ஓ.பி.எஸ்.ஐ சேர்க்க செங்கோட்டையன் வலியுறுத்தல்?

சென்னை: வரும் 5ம் தேதி மனம் திறக்கும் செங்கோட்டையன் ஒருங்கிணைந்த அதிமுகவை வலியுறுத்துவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. பழனிசாமிக்கு விவசாயிகள் நடத்திய பாராட்டு விழாவில் ஜெயலலிதா படம் இடம்பெறவில்லை என குற்றம் சாட்டினார் செங்கோட்டையன். பிப்ரவரியில் நடந்த பாராட்டு விழாவில் எம்ஜிஆர், ஜெயலலிதா படம் இடம்பெறவில்லை என செங்கோட்டையன் குற்றம் சாட்டினார். எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய செங்கோட்டையன் டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. டெல்லி சென்று வந்த பிறகு செங்கோட்டையன் அமைதி காத்து வந்தார்

Advertisement

மீண்டும் அதிருப்தியை பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ள செங்கோட்டையன் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயாராவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செங்கோட்டையன் போர்க்கொடியால் அதிமுகவில் எடப்பாடிக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கோபிச்செட்டிபாளையம் அதிமுக அலுவலகத்தில் ஆதரவாளர்களுடன் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். செங்கோட்டையன் நடத்தும் ஆலோசனையில் பவானிசாகர் தொகுதி எம்.எல்.ஏ.பண்ணாரியும் பங்கேற்றுள்ளார். 5ம் தேதி மனம் திறந்து பேசப் போவதாக அறிவித்துள்ள செங்கோட்டையன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துவதால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வரும் 5ம் தேதி மனம் திறக்கும் செங்கோட்டையன் ஒருங்கிணைந்த அதிமுகவை வலியுறுத்துவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்த செங்கோட்டையன் திட்டமிட்டுள்ளார்.

Advertisement