தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தொன்மை மாறாமல் புதுப்பித்து பாதுகாத்தமைக்கு கும்பகோணம் துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலுக்கு யுனெஸ்கோ விருது!!

Advertisement

சென்னை : ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் பண்பாட்டு நிறுவனமானது (UNESCO - United Nations Educational Scientific and Cultural Organisation) தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், துக்காச்சி அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயிலுக்கு அதன் தொன்மை மாறாமல் புதுப்பித்து குடமுழுக்கு நடத்தி பாதுகாத்தமைக்கு 2024ம் ஆண்டிற்கான சிறப்பு விருதினை (2024 - Award of Distinction) வழங்கி சிறப்பித்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை தனது நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்குகள் நடத்துதல், திருக்குளங்களை சீரமைத்தல், திருத்தேர்களை புனரமைத்தல், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், திருக்கோயில் சொத்துகளை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்து பாதுகாத்தல் போன்ற பல்வேறு பணிகளை செம்மையாக மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மை வாய்ந்த திருக்கோயில்களை அதன் பழமை மாறாமல் புதுப்பித்திட ஆண்டுதோறும் ரூ.100 கோடி வீதம் இதுவரை ரூ.300 கோடியினை அரசு மானியமாக வழங்கி உள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், துக்காச்சி அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயிலானது சுமார் 1,300 ஆண்டுகள் தொன்மையானதாகும். இத்திருக்கோயிலுக்கு இறுதியாக குடமுழுக்கு எப்போது நடைபெற்றது என்றே அறியப்படாத நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி ரூ.5 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த 03.09.2023 அன்று வெகுவிமரிசையாக குடமுழுக்கு நடைபெற்றது. இந்நிலையில் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் பண்பாட்டு நிறுவனமானது (UNESCO) 2024 ஆம் ஆண்டிற்கான சிறப்பு விருதினை (2024 - Award of Distinction) தொன்மை மாறாமல் புதுப்பித்து குடமுழுக்கு நடத்தி பாதுகாத்தமைக்காக கும்பகோணம் வட்டம், துக்காச்சி அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயிலுக்கு வழங்கி சிறப்பித்துள்ளது.

Advertisement

Related News