தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வேலையில்லா பிரச்னையை தீர்ப்பதற்கு எதுவும் செய்வதில்லை பிரதமர் மோடிக்கு எப்போதும் தேர்தல் மனநிலை: காங். விமர்சனம்

புதுடெல்லி: பிரதமர் மோடி வேலைவாய்ப்பின்மை பிரச்னையை தீர்ப்பதற்கு பதிலாக எப்போதும் தேர்தல் மனநிலையில் இருக்கிறார் என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளபதிவில், ‘‘ கடந்த 11 ஆண்டுகால தவறான ஆட்சி சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளையும் பாதித்துள்ளது. அதிகரித்து வரும் வேலையின்மை மிகவும் கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது. ஆனால் இந்த பிரச்னையை தீர்ப்பதற்கு பதிலாக பிரதமர் மோடி எப்போதும் தேர்தல் மனநிலையில் தான் இருக்கிறார். பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பொய் வாக்குறுதிகளை அளித்து பாகல்பூர் மற்றும் சீமாஞ்சல் பகுதியின் வளர்ச்சியை புறக்கணித்துள்ளது. பிரதமர் வருகை தரும் இந்த நேரத்தில் சில பொய் வாக்குறுதிகளை நினைவூட்ட விரும்புகிறோம்.

Advertisement

*2015ம் ஆண்டில் பாகல்பூரில் விக்ரம்ஷிலா மத்திய பல்கலைக்கழகத்தை ரூ.500கோடி செலவில் 500 ஏக்கரில் கட்டுவதாக பிரதமர் கூறினார். பத்து ஆண்டுகள் ஆகியும் ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கப்படவில்லை.

* 2015ம் ஆண்டில் பிரதமர் மோடி அடுத்த முறை வரும்போது மோதிஹாரி சர்க்கரை ஆலையில் இருந்து தயாரிக்கப்பட்ட தேநீர் குடிப்பேன் என்றார். 11 ஆண்டுகள் கடந்துவிட்டன. மக்கள் இன்னும் தேநீருக்காக காத்திருக்கிறார்கள்.

*2020ம் ஆண்டில் தர்பங்கா எய்ம்ஸ்க்கு ரூ.1264கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார். ஆனால் இன்னும் கட்டிடம் கட்டப்படவில்லை. மருத்துவமனை செயல்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Related News