தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்புடன் ஒத்துழைக்க மறுத்தால் ஈரான் மீது மீண்டும் பொருளாதார தடை!!

டெஹ்ரான் : ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்புடன் ஒத்துழைக்க மறுத்தால் ஈரான் மீது மீண்டும் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று ஐரோப்பிய நாடுகள் எச்சரித்துள்ளன. பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய 3 நாடுகள் சார்பில் ஐ.நா.சபைக்கு அனுப்பிய கடிதத்தில் ஈரான், அணு ஆயுதம் உருவாக்குவதை தடுக்க ராஜ்ய ரீதியிலான நடவடிக்கைகள் தொடரும் என்று கூறப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் மேற்கத்திய நாடுகளுடன் ஈரான் புதிய அணுசக்தி பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.

ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்புடன் ஒத்துழைப்பு மேற்கொள்ளாவிட்டால், அந்நாட்டின் மீது 2015ம் ஆண்டிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகள் மீண்டும் அமல்படுத்தப்படும் என எச்சரித்துள்ளன. ஈரான் நாடாளுமன்றம், ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்புடனான ஒத்துழைப்பை நிறுத்தி வைக்கும் மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளது. குறிப்பாக, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா அதன் அணுசக்தி நிலையங்கள் மீது நடத்திய சமீபத்திய வான்வழித் தாக்குதல்களைக் காரணம் காட்டி இந்த முடிவை ஈரான் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News