தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உளுந்தூர்பேட்டை போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் 3 பிள்ளைகளுடன் தாய் தர்ணா போராட்டம்

*கள்ளக்குறிச்சியில் பரபரப்பு

Advertisement

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் 2 மகள், ஒரு மகன் என 3 பிள்ளைகளுடன் தாய் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கு விரைந்து வந்த கள்ளக்குறிச்சி உதவி ஆய்வாளர்கள் ஏழுமலை, விஜயராகவன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் அந்த பெண் போராட்டத்தை கைவிட மறுத்து, எனது புகார் மனு மீது உளுந்தூர்பேட்டை போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி கதறி அழுதபடியே தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டார். பின்னர் போலீசார் சுமூக பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து அந்த பெண் தர்ணா போராட்டத்தை கைவிட்டார். இதனை தொடர்ந்து அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், தனது பெயர் மகாலட்சுமி என்றும் உளுந்தூர்பேட்டை அடுத்த ஏமம் கிராமத்தை சேர்ந்தவர் எனவும் தனது கணவர் அருள் கடந்த 3 ஆண்டுகளாக குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து அடித்து துன்புறுத்தி வந்ததாகவும், இதுகுறித்து கடந்த 24.07.2025ம் தேதி உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் அதற்கு முன்னதாக உளுந்தூர்பேட்டை சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்திலும் புகார் கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்காததால் மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும், தனது கணவர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தனக்கு வேறு வழிதெரியாமல் தனது பிள்ளைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.

இதுபோன்று போராட்டத்தில் ஈடுபட கூடாது என போலீசார் அறிவுறுத்தி உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் தங்களது புகார் மனு மீது விரைந்து நடவடிக்கை எடுப்பார்கள் என கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண் மற்றும் அவரது பிள்ளைகளை போலீசார் அனுப்பி வைத்தனர்.

தனது கணவர் மீது போலீசில் கொடுத்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்காத உளுந்தூர்பேட்டை போலீசார்களை கண்டித்து ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் 3 பிள்ளைகளுடன் தாய் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

Related News