தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விழுப்புரம் மாவட்டத்தில் 4 தாலுகா அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

விழுப்புரம் : தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தின் சார்பில் நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், வானூர், திண்டிவனம், கண்டாச்சிபுரம் ஆகிய 4 தாலுகா அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

விழுப்புரம் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற காத்திருக்கும் போராட்டத்துக்கு ஒன்றிய தலைவர் அய்யனார் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட தலைவர் செயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்பவர்களாக கருதி அந்தோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ் தற்போது உள்ள என்பிஎச்எச் மற்றும் பிஎச்எச் ரேஷன் கார்டுகளை ஏஏஒய் ரேஷன் கார்டுகளாக மாற்றி 35 கிலோ அரிசி வழங்க வேண்டும்.

தமிழக முதலமைச்சரின் ஆணைக்கிணங்க தகுதி உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் இலவச குடிமனை பட்டாவை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒன்றிய தலைவர்கள் முருகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து விழுப்புரம் தாசில்தார் கனிமொழி விரைந்து வந்து காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனை தொடர்ந்து காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Advertisement

Related News