தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உக்ரைன் மீதான உத்தி குறித்து பிரதமர் மோடி அதிபர் புடினிடம் கேட்டதாக கூறுவது ஆதாரமற்றது: இந்தியா மறுப்பு

புதுடெல்லி: நியூயார்க்கில், நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ருட்டே பேட்டி ஒன்றில், அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்தியா மீதான வரிகள் ரஷ்யாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. இந்திய பிரதமர் மோடி, ‘‘அதிபர் புடினுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உக்ரைன் மீதான உத்தி குறித்து கேட்டுள்ளார்” என்று கூறியிருந்தார். இந்நிலையில் மார்க் ருட்டே கருத்துக்களை வெளியுறவு துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் மறுத்துள்ளார்.

Advertisement

இது ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘‘நேட்டோ தலைவரின் அறிக்கை உண்மையில் தவறானது மற்றும் முற்றிலும் ஆதாரமற்றது. பிரதமர் மோடியின் ஈடுபாடுகளை தவறாக சித்தரிக்கும் அல்லது ஒருபோதும் நடக்காத உரையாடல்களை குறிக்கும் ஊகங்கள் அல்லது கவனக்குறைவான கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிரதமர் மோடி அதிபர் புடினுடன் அவர் கூறிய விதத்தில் பேசியதில்லை. அத்தகைய உரையாடல்கள் எதுவும் நடக்கவில்லை. நேட்டோ போன்ற ஒரு முக்கிய அமைப்பின் தலைவர் பொது அறிக்கைகளில் அதிக பொறுப்புடன் இருப்பார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

* அமெரிக்காவில் இருந்து 2417 பேர் நாடு கடத்தல்

வெளியுறவு துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘‘இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து 2417 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர் அல்லது திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இந்தியா சட்டவிரோத இடம்பெயர்வுக்கு எதிராக நிற்கிறது. மக்களின் சட்டப்பூர்வ நடமாட்டத்திற்கான வழிகளை ஊக்குவிக்க விரும்புகின்றது” என்றார்.

Advertisement