தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஆர்சிபி வெற்றி கொண்டாட்ட நெரிசலில் சிக்கி உடுமலை பள்ளி தாளாளர் மகள் பலி: உடலை பார்த்து பெற்றோர் கதறல்

உடுமலை: ஆர்சிபி வெற்றி கொண்டாட்ட நெரிசலில் சிக்கி உடுமலையை சேர்ந்த பள்ளி தாளாளரின் மகளான சாப்ட்வேர் இன்ஜினியர் பலியானார். சொந்த ஊர் வந்த ஒரே மகளின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றது. இதையொட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த வெற்றி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் இறந்தனர். இவர்களில் திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த பெண் சாப்ட்வேர் இன்ஜினியர் காமாட்சி தேவியும் (27) ஒருவர்.

இவர் உடுமலையில் திருப்பூர் ரோடு ஏரிபாளையம் விஜி ராவ் நகர் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி (65), ராஜலட்சுமி (60) தம்பதியின் ஒரே மகள் ஆவார். மூர்த்தி மடத்துக்குளம் ஒன்றியம் மைவாடி பிரிவு அருகே உள்ள விவேகானந்தா வித்யாலயம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர். காமாட்சி தேவி பெங்களூரில் உள்ள அமேசான் நிறுவனத்தில் கடந்த 5 ஆண்டுகளாக மேலாளராக பணியாற்றி வந்தார். பி.இ. ஐ.டி படித்துள்ளார். இவர் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று முன்தினம் மாலை நடந்த ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தில் பங்கேற்க சக நண்பர்களுடன் சென்றார்.

அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இறந்தார். அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் நேற்று உடுமலைக்கு கொண்டுவரப்பட்டது. ஒரே மகளை இழந்த பெற்றோர், காமாட்சி தேவியின் உடலை பார்த்து கதறி அழுதனர். தொடர்ந்து மைவாடி பிரிவில் உள்ள விவேகானந்தா வித்யாலயா பள்ளி வளாகத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக காமாட்சி தேவி உடல் வைக்கப்பட்டது. உள்ளூர் பிரமுகர்கள், பொதுமக்கள், உறவினர்கள், உடன் படித்தவர்கள், பணியாற்றியவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். நேற்று மாலை அவரது உடல் உடுமலை மின் மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

Related News