தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மக்களைத் தேடி அரசு சேவைகள் என்ற நோக்கத்தோடு நடத்தப்பட்டு வரும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை : மக்களைத் தேடி அரசு சேவைகள் என்ற நோக்கத்தோடு நடத்தப்பட்டு வரும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களை தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தலின்பேரில், ஆலந்தூர் சட்டமன்றத்தொகுதிக்கு உட்பட்ட சென்னை மாநகராட்சி மண்டலம் 12, வார்டு 165, வானுவம்பேட்டை பகுதியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை இன்று ஆய்வு செய்தோம்.

Advertisement

பொதுமக்களிடம் கலந்துரையாடி, அவர்களுக்கான சேவைகள் முறையாக கிடைப்பது பற்றிக் கேட்டறிந்தோம். உடனுக்குடன் ஏற்படுத்தக்கூடிய தீர்வுகளுக்கான சான்றிதழ்களை வழங்கியதோடு, முகாமில் பங்கேற்ற பொதுமக்களுக்கு அரசு ஏற்பாட்டிலேயே உணவு வழங்கி மகிழ்ந்தோம்!.இவ்வாறு தெரிவித்தார். மற்றொரு பதிவில், "மக்களைத் தேடி அரசு சேவைகள் என்ற நோக்கத்தோடு நடத்தப்பட்டு வரும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம்.

இன்றைய தினம், சென்னை சோழிங்கநல்லூர் தொகுதி - சென்னை மாநகராட்சி மண்டலம் -15, வார்டு 195, துரைப்பாக்கத்தில் நடைபெற்ற முகாமுக்குச் சென்று அங்கு வழங்கப்படும் சேவைகளை ஆய்வு செய்தோம். பொதுமக்களின் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வுகளை வழங்க வேண்டும் என்று முகாமில் இருந்த பணியாளர்களை அறிவுறுத்தினோம். முகாம் குறித்த பொதுமக்களின் கருத்துக்களையும் - ஆலோசனைகளையும் பெற்றோம்."இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

Advertisement