தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உண்மையைத்தான் சொல்கிறார் உதயநிதி ஸ்டாலின் எடப்பாடி பொதுச்செயலாளராக இருந்தால் அதிமுக ஆட்சிக்கு வராது: டிடிவி.தினகரன் ‘பளீச்’

மதுரை: உண்மையைத்தான் சொல்கிறார் உதயநிதி ஸ்டாலின். எடப்பாடி பொதுச் செயலாளராக இருக்கும் வரை அதிமுக ஆட்சிக்கு வராது என டிடிவி தினகரன் கூறியுள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், மதுரை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: நயினார் நீண்ட நாள் நண்பர். தனிப்பட்ட முறையில் கோபம், வருத்தம் இல்லை. ஓபிஎஸ் விவகாரத்தில் அவர் நடந்து கொண்டதற்கு தான் பதில் சொன்னேன். நல்ல நண்பராக எப்போதும் சந்திக்கலாம். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அருமையான கருத்தை கூறியுள்ளார். ‘‘எங்களது வெற்றியின் ரகசியமே எடப்பாடி தான். அவர் அதிமுக பொதுச்செயலாளராக நீடிக்க வேண்டும். நூறாண்டுகள் வாழ வேண்டும். அவர் எதிர்கட்சி தலைவராக இருந்தால்தான், வெற்றி எங்களுக்கு சுலபம்’’ என்கிறார். கூட்டணி பலம் இருந்தாலும், எடப்பாடிதான் வெற்றியின் ரகசியம் என்பதை அவர் கூறியுள்ளார். இதை ஜெயலலிதாவின் தொண்டர்கள், இணைப்பை முன்னிறுத்துவோர் புரிந்து கொள்ள வேண்டும்.

Advertisement

வஞ்சப் புகழ்ச்சியாக சொல்லியிருந்தாலும் உண்மை அதுதான். துரோக சிந்தனை உள்ளவர் பொதுச்செயலாளராக இருக்கும் வரை அதிமுக ஆட்சிக்கு வராது என்பது தான் உண்மை. குறுகிய மனப்பான்மையுடன், சுயநலத்துடன் இரட்டை இலை, தொண்டர், பண பலம் இருந்தும் அந்த இயக்கம் தோற்க நாங்கள் காரணமல்ல. அவர் தான் காரணம் என்பதை அங்கே இருப்பவர்கள் உணர வேண்டும். அதை உதயநிதி ஸ்டாலின் தெளிவாக கூறிவிட்டார். ஒன்றிணைக்க விரும்புவோர் இதை உணர வேண்டும். அமமுக துவங்கியது எதற்கு என தெரியும். எங்களை அழித்துக் கொண்டு தற்கொலை முயற்சிக்கு சமமான முடிவை நாங்கள் உறுதியாக எடுக்க மாட்டோம். எங்கள் வழி தனி வழி. எங்கள் கூட்டணியை முடிவு செய்யும் இடத்தில் சுதந்திரமாக உள்ளோம்.

எடப்பாடியை தலையில் வைத்து ஆடுபவர்கள் திருந்த வேண்டும். அவருக்கு காவடி தூக்குபவர்கள் சொல்வது நடக்கப்போவது இல்லை. எடப்பாடி தலைமையில் என்ன முயற்சி செய்தாலும் தோல்வி என்பது உறுதி. இதை நான் தெளிவாக சொல்கிறேன். டெல்லி என்னை அழைத்து பேசினால், என்ன பேசினேன் என்பதை வந்து கூறுகிறேன். செங்கோட்டையன் மூத்த தலைவர், 2016ல் ஆட்சி அமைக்க நேரம் கேட்டபோது என்னுடன் இருந்தவர். அரசியல் அல்ல; வேறு காரணத்திற்காக ஜெயலலிதா, அவரை நீக்கியிருந்தார். கவர்னர் மாளிகையில் செங்கோட்டையன் பெயரை அமைச்சர் பட்டியலில் சேர்த்தது நான் தான். ஏனென்றால் அவர் மூத்த நிர்வாகி. அவர் எடுக்கும் முயற்சிக்கு நான் ஆதரவாக இருப்பேன். எடப்பாடி, இரட்டை இலைக்கு உரிமை கொண்டாடும் வரை, முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை வெற்றி என்பது எட்டாக்கனியாகத் தான் இருக்கும். இது, தனிப்பட்ட விரோதம் அல்ல. யதார்த்தம் தான். இவ்வாறு கூறினார்.

Advertisement