தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நிலத்தடிநீரை பாதுகாக்க உடன்குடியில் ஊரணி சீரமைக்கப்படுமா?

*பொதுமக்கள் எதிர்பார்ப்பு

Advertisement

உடன்குடி : உடன்குடி பேரூராட்சி பகுதியில் நிலத்தடி நீரை பாதுகாக்க ஊரணியை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உடன்குடி ஊரணி ஒரு நீர்பிடிப்பு குட்டை ஆகும். இதில் ஆண்டுதோறும் மழைகாலங்களில் முழுமையாக நிரம்பினால் அந்த பகுதியில் உள்ள நிலத்தடி நீர் பாதுகாக்கப்படும்.

விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளில் உள்ள கிணறுகள், ஆழ்குழாய் கிணறு ஆகியவற்றில் கடல்நீர் உட்புகுந்து விடாமல் தடுக்கப்படும். மேலும் இப்பகுதியிலுள்ள தண்ணீர் உப்புநீராக மாறாமல் இருக்கும். அப்படிபட்ட இந்த உடன்குடி ஊரணியில் தற்போது காட்டு செடிகள், உடை மரங்கள் அதிக அளவில் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளது.

மேலும் ஊரணியின் 4 பக்க கரைகளும் அழிந்து சிதிலமடைந்த நிலையில் உள்ளது. மழைகாலத்திற்கு முன்பு ஊரணியை முழுவதும் சுத்தப்படுத்தி, ஆழப்படுத்தி கரைகளை உயர்த்தி, கூடுதல் தண்ணீர் தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மழைக்காலத்திற்கு முன்பு தூர்வாருவது அவசியம்:

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், வடகிழக்கு பருவமழைக்காலங்களில் பெய்யும் நீரை நம்பி தான் ஊரணி உள்ளது. இந்த ஊரணியில் முழுமையாக தண்ணீர் நிரம்புவதால் இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயருகிறது.

எனவே நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில் ஊரணியை தூய்மைப்படுத்த வேண்டும். மேலும், சிதிலமடைந்து காணப்படும் கரைகளை பலப்படுத்த வேண்டும். மழைக்காலத்திற்கு முன் பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Advertisement