தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

உதகையில் மூடப்பட்ட சுற்றுலா தலங்கள் மீண்டும் திறப்பு: தாவரவியல், ரோஜா பூங்காவில் சுற்றுலா பயணிகள் அனுமதி

நீலகிரி: உதகையில் காலை முதலே மழை இல்லாததால் சுற்றுலா தலங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இந்தியா வானிலை ஆய்வு மையம் இன்றைய தினம் நீலகிரி மாவட்டம் முழுவதும் மிக கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து இருந்தது. ஆனால் நேற்று தினம் மழை தாக்கம் என்பது முழுவதுமாக இல்லாமல் இருந்த நிலையில், இரவில் பரவலாக மாவட்டத்தில் லேசான மழை பெய்தது. இந்தநிலையில் தான் இன்று காலை முதலே மழை இல்லாத காரணத்தினால் சுற்றுலா தலங்கள் மீண்டும் திறக்கப்பட்டு இருக்கிறது.

குறிப்பாக ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டதை, அடுத்து மாவட்டத்தில் இருக்க கூடிய பள்ளிகளுக்கு இன்றைய தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டுயிருந்தது. அதேபோல் சுற்றுலா பயணிகளை நலன் கருதி சுற்றுலா தலங்கள் மூடப்படுவதாகவும் மாவட்ட ஆட்சியர் நேற்றைய தினம் அறிவித்து இருந்தார். அதன்படி இன்றைய காலை முதலே அனைத்து சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுயிருந்த நிலையில், மழை இல்லாத காரணத்தால் உதகையில் இருக்க கூடிய அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா,தேயிலை பூங்கா ஆகிய மூன்று சுற்றுலா தலங்கள் மட்டும் திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து லேசான மழை பெய்ததால் சுற்றுலா பயணிகள் குடை பிடித்தவாறு சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர்.