தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எழுத்து பிழையுடன் கூடிய காசோலை வைரல் இமாச்சல் அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்

சிம்லா: எழுத்து பிழைகளுடன் கூடிய காசோலை சமூக வலைதளங்களில் வைரலாகியதையடுத்து இமாச்சல் பிரதேச பள்ளி ஆசிரியரை பள்ளி கல்வி இயக்குனர் சஸ்பெண்ட் செய்துள்ளார். இமாச்சல் பிரதேசம், சிர்மாவுர் மாவட்டம் ரோஹ்நட் என்ற இடத்தில் அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. இதில் ஓவிய ஆசிரியராக பணிபுரிபவர் அத்தர் சிங். இந்த நிலையில் பிரதம மந்திரி ஊட்ட சத்து திட்டத்துக்காக கடந்த மாதம் 25ம் தேதி ரூ.7616க்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

அத்தர் சிங் ஆங்கிலத்தில் எழுதிய காசோலையில் பல எழுத்து பிழைகள் இருந்தன. அதில் ஏழு என்பதை சேவன் என்றும் ஆயிரத்துக்கு வியாழக்கிழமை என்றும் நூறு’ என்பதை ஹரேந்திரா என்றும் பதினாறு என்பதற்கு பதிலாக அறுபது என்று தவறாக எழுதப்பட்டிருந்தது. பல பிழைகள் இருந்ததால் அந்த காசோலையை வங்கி நிர்வாகம் நிராகரித்துள்ளது. எழுத்து பிழையுடன் கூடிய காசோலை சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த விவகாரம் சர்ச்சையானதையடுத்து, ஆசிரியர் அத்தர்சிங், பள்ளி முதல்வர் குல்தீப் சிங் ஆகியோர் நேரில் வந்து விளக்கம் அளிக்கும்படி பள்ளி கல்வி இயக்குனர் அஷிஷ் கோலி உத்தரவிட்டார். இந்த விசாரணையின் போது தான் தவறாக எழுதியதை அத்தர்சிங் ஒப்பு கொண்டுள்ளார். அவருடைய விளக்கத்தை ஏற்காத பள்ளி கல்வி துறை இயக்குனர், அத்தர்சிங்கை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். இதில் மேற்பார்வை அதிகாரியாக இருந்த குல்தீப்சிங் மீதும் நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

Related News