தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காயல்பட்டினத்தில் பதுக்கி வைத்து கஞ்சா விற்ற வாலிபர்கள் இருவர் கைது

Advertisement

*பைக் பறிமுதல், வங்கி கணக்கு முடக்கம்

ஆறுமுகநேரி : காயல்பட்டினத்தில் பதுக்கிவைத்து கஞ்சா விற்ற வாலிபர்கள் இருவரை கைதுசெய்த போலீசார், இருவரிடம் இருந்து 1 கிலோ 400 கிராம் கஞ்சா, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து இருவரது வங்கிக் கணக்குகளும் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. காயல்பட்டினம் அருணாசலபுரம் காட்டுப் பகுதியில் பதுக்கிவைத்து கஞ்சா விற்பனை நடப்பதாக ஆறுமுகநேரி எஸ்.பி. தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து ஆறுமுகநேரி எஸ்.ஐ. சுகுமார் மற்றும் போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து மேற்கொண்டனர். அப்போது அங்கு பைக்கில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வாலிபர்கள் இருவர் நின்றுகொண்டிருந்தனர். இதையடுத்து இருவரையும் சோதனையிட்டபோது இருவரும் 1 கிலோ 400 கிராம் கஞ்சாவை பதுக்கிவைத்திருந்ததும் மேலும் அவற்றை பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்ய இருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் காயல்பட்டினம் அருணாசலபுரத்தில் வசித்துவரும் ஷேக் முகமது நாசரின் மகன் செய்யது முகமது கோயா (26) மற்றும் சதுக்கை தெருவைச் சேர்ந்த கமாலின் மகன் அபூபக்கர் சித்திக் (38) என்பது தெரியவந்தது.

இதையடுத்து இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீசார், இருவரையும் கைதுசெய்தனர். மேலும் இருவரிடம் இருந்து செல்போன், பைக், விற்பனைக்கு வைத்திருந்த 1 கிலோ 400 கிராம் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து இருவரது வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டது.

Advertisement

Related News