இருசக்கர வாகனங்களுக்கு ‘ஏபிஎஸ்’ கட்டாயம்; டூவீலர் வாங்கினால் 2 ஹெல்மெட் இலவசம்: ஒன்றிய அரசு அறிவிப்பு
இதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும், காயங்களையும் தடுப்பதற்குப் பாதுகாப்பான தொழில்நுட்பங்களின் தேவை நீண்ட காலமாகவே வலியுறுத்தப்பட்டு வந்தது. இத்தகைய விபத்துகளைக் குறைத்து, ஓட்டுநர்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில், ஒன்றிய போக்குவரத்து அமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதிக்குப் பிறகு தயாரிக்கப்படும் அனைத்து புதிய இருசக்கர வாகனங்களிலும், அவற்றின் இன்ஜின் திறனைக் கருத்தில் கொள்ளாமல், ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயமாகப் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.
மேலும், இனிமேல் புதிய இருசக்கர வாகனத்தை வாங்கும் போது, இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற இரண்டு ஹெல்மெட்களையும் சம்பந்தப்பட்ட நிறுவனம் வழங்க வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகள், இருசக்கர வாகனப் பயணத்தை முன்பை விடப் பாதுகாப்பானதாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.