தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டூவீலர் திருட்டு வழக்கில் ரூ.20,000 லஞ்சம் கேட்பா? விசாரணைக்கு சென்றவர் விஷம் குடித்து தற்கொலை: காரியாபட்டி காவல்நிலையம் முற்றுகை, மறியல் பஸ் மீது கல்வீச்சு

காரியாபட்டி: காரியாபட்டி அருகே காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு சென்று வந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். காவல்நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள் பஸ் மீது கல்வீசி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.  விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அச்சம்பட்டியை சேர்ந்தவர் அழகுப்பாண்டி (34). கூலி தொழிலாளி. இவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு டூவீலர் காணாமல் போன வழக்கின் விசாரணைக்காக காரியாபட்டி காவல்நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

Advertisement

அழகுப்பாண்டியின் நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சிலர், உன் மீது வழக்கு ஏதும் இல்லாமல் செய்வதற்கு ரூ.20 ஆயிரம் காவல் நிலையத்திற்கு கொடுக்க வேண்டும் என வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அழகுப்பாண்டி, நேற்று முன்தினம் இரவு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி எர்ரம்மாள் காரியாபட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை செய்து கொண்ட அழகுப்பாண்டியின் உடல் பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அழகுப்பாண்டியின் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி காரியாபட்டி போலீஸ்நிலையத்தை நேற்று உறவினர்கள் முற்றுகையிட்டனர். தொடர்ந்து காரியாபட்டி - திருச்சுழி ரோட்டில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அப்போது காரியாபட்டியில் இருந்து மதுரை சென்ற பஸ் மீது கல்வீசி தாக்கினர்.

இதனால் மறியலில் ஈடுபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் ஏஎஸ்பி மதிவாணன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுதொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். இதனையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Advertisement

Related News