தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தவெக கட்சிக்கு கொள்கை கிடையாது: அமைச்சர் நாசர் தாக்கு

சென்னை: தவெக கட்சிக்கு கொள்கை கிடையாது என அமைச்சர் நாசர் கூறினார். திருவள்ளூர் மத்திய மாவட்டம், ஆவடி ரயில் நிலையம் அருகே உள்ள திமுக அலுவலகத்தில் ஓரணியில் தமிழ்நாடு சார்பில் அமைச்சர் நாசர் செய்தியாளர் சந்திப்பு நடந்தது. அப்போது அவர் கூறியதாவது: திருவள்ளூர் மத்திய மாவட்டம், ஆவடி, பூந்தமல்லி தொகுதிகளைச் சேர்த்து 854 பூத்துகளில் 1,42,532 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 3,38,161 பேர் திமுக உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

Advertisement

அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு 854 வாக்குச்சாவடிகளிலும் தமிழ்நாட்டை காக்கும் உறுதிமொழி ஏற்பு கூட்டங்கள் இன்று நடக்கிறது. வரும் 17ம் தேதி கரூரில் நடைபெறும் முப்பெரும் விழாவில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலிருந்தும் முன்மொழியப்பட்ட தீர்மானங்கள் ஒருங்கிணைக்கப்படும்.திமுகவை குறை சொன்னால்தான் வளர முடியும் என்பது அனைத்து கட்சிக்கும் தெரியும். 2026ம் ஆண்டு ஏழாவது முறையாக திராவிட மாடல் ஆட்சி அமையும்.

மீண்டும் தமிழக முதல்வர் ஆட்சி அமைப்பார். தவெக கட்சிக்கு கொள்கை என்பதே கிடையாது. ஒட்டுமொத்த கும்பலுக்கும் புத்தி இல்லை என்பது போன்ற கூட்டம் அது. சினிமாவில் மார்க்கெட் போன பின்னர் தற்போது அரசியலுக்கு வந்துள்ளார் விஜய். அரசியல்பற்றி அறிந்து தெரிந்து புரிந்து பேச வேண்டும். அவர் முதலில் அவரது கட்சி கொள்கையை அறிவிக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

Advertisement